Hidden Histories: The Untold Story of Tirumalpur’s Konar Temple!

Tucked away in the peaceful village of Tirumalpur in Ranipet District lies the little-known Konar Temple—a quiet but significant piece of Tamil Nadu’s heritage. Though not widely recognized today, the temple holds layers of history, tradition, and architectural interest. How to Reach the Temple The Temple is situated on the Tirumalpur to Panappakkam route, which…

3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்திட்டைகள், நினைவுச் சின்னங்கள்

தென்னிந்திய வட இந்தியக் கலைகளின் சங்கமம் செய்யும் பட்டடக்கல்லில் இந்த நினைவுச்சின்னம் காணப்படுகிறது. கர்நாடக மாநிலம் பாகல் கோட்டை மாவட்டத்தில், கிருஷ்ணா நதியின் துணை நதியான மலப்பிரபா நதியின் கரையில் அமைந்துள்ள பட்டடக்கல் தொகுப்பு கோயில்களில். அதன் அருகே இந்த 3000 ஆண்டுக்கு முந்தய நினைவுச்சின்னம், பட்டடக்கல் தொகுப்பு கோயில்களில் போகும் பிரதான சாலை ஓரத்தில் இருந்தாலும், மக்களால் கவனம் ஈர்க்கப்படாமல் தனிமையில் மக்கள் வருகைக்காக காத்துக்கொண்டிருக்கிறது. Iron Age Megalith – Dolmen site in…

இராஜேந்திர சோழன் நினைவிடமா?

பிரம்மதேசம் சந்திரமௌலீஸ்வரர் என்ற திருப்போந்தை ஆழ்வார் சிவன் கோயில், இராஜேந்திர சோழனின் பள்ளிப்படை என்றே செய்திகள் பரப்பப்பட்டு வருகிறது.  ஆனால் கல்வெட்டை நன்கு ஆய்ந்த ஆய்வாளர்கள் இக்கோயில் பள்ளிப்படை கோயில் அல்ல என்றும் இது வழக்கமாக அமைக்கப்பட்ட சிவன் கோயில் என்றும் தெரிவிக்கின்றனர்.  இதற்கு அவர்கள் ஆதாரமாக கொள்வது இக்கோயிலில் உள்ள கம்பவர்மன் கல்வெட்டு ஆகும். முன்பாகவே சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்னர் எழுப்பப்பட்ட கோயில் எப்படி பள்ளிப்படை கோயிலாக இருக்கும் என்பது அவர்களது வாதம்.  பிரம்மதேசம்…

தமிழகத்தின் முதல் ஆடலரசன் சிற்பம் பெற்ற சீயமங்கலம் குடைவரைக் கோயில்!

சீயமங்கலம், சிம்மமங்கலம் என்று பல்லவர் காலத்தில் அழைக்கப்பட்ட இவ்வூரில், குடைவரைக் கோயில் ஒன்றை அமைத்து அழகு பார்த்தான் மகேந்திரவர்மன். 7ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்குடைவரைக் கோயிலின் எதிராக வலது புறம் அமைந்துள்ள மிகப் பெரிய ஏரியும் அதன் நடுவில் ஆங்காங்கே செங்குத்தான தூண்களைப் போன்ற பாறைகளும் இயற்கை அழகுடன் அமைந்துள்ளன.  இயற்கையாக அமைந்துள்ள இத்தூண் அமைப்புகளால் இக்கோயிலில் குடிகொண்டுள்ள ஈசனுக்கு ‘தூணாண்டார்‘ என்றும் ‘ஸ்தம்பேஸ்வரர்‘ என்றும் அழைக்கப்பட்டுள்ளார். இங்குள்ள கல்வெட்டு இக்குடைவரைக் கோயிலை “அவனிபாஜன பல்லவேஸ்வரம்” எனக் கூறுகிறது….

மகேந்திரவர்ம பல்லவனின் உன்னத படைப்பு சத்ருமல்லேஸ்வரம்!

பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் எழுப்பிய கோயில்கள் இன்றும் தமிழகத்தின் கோயில் கட்டுமானக் கலைக்குத் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கின்றன. அதில் தனிச்சிறப்பு வாய்ந்தது தளவானூர் குடைவரைக் கோயில். முற்காலத்தில் தலைவாய்நல்லூர் என்று அழைக்கப்பெற்ற தளவானூருக்கு வடக்கே மாம்பட்டு என்னும் இடத்தில் பஞ்சபாண்டவர் மலையில் இக்குடைவரைக் கோயிலை காணலாம். கல்வெட்டின் மூலமாக இக்குடைவரைக் கோயில் ‘சத்ருமல்லேஸ்வரம்‘ என்று அழைக்கப்பெற்றதாக அறியமுடிகின்றது. தமிழ்நாட்டிலுள்ள குடைவரைக் கோயில்கலில், முகப்பில் மகரத் தோரண பெற்ற ஒரே குடைவரை என்பது சத்ருமல்லேஸ்வராலயத்தின் தனிச் சிறப்பாகும்….

நடுநாட்டில் சோழர் கால பொக்கிஷம்! – வேதபுரீசுவரர் கோயில், ஏமப்பூர்

ஏமப்பூர் என்று தற்பொழுது வழங்கும் இவ்வூர் திருக்கோயிலூர் வட்டத்தில் உள்ள திருவெண்ணெய்நல்லூருக்கு வடக்கே மலட்டாற்றின் வடகரையிலும், பெண்ணையாற்றின் தென்கரையிலும் அமைந்துள்ளது. ஏமப்பேரூர் ஒரு தனி நாடாக விளங்கி உள்ளது. இது ராஜேந்திர சிம்ம வளநாட்டு திருமுனைப்பாடியின் ஒருபகுதியாகும். கோயில் கோட்டத்தில் உள்ள சிற்பங்கள் ஒவ்வொன்றும் சோழர்கால கலைத்திறமைக்கு ஒரு எடுத்துக்காட்டு. பிட்ச்சாடனர், தட்சிணாமுர்த்தி, ரிஷபத்துடன் உமாசகித மூர்த்தி, பிரம்மா, துர்கை ஆகியோர் உள்ளனர். இதில் உமாசகிதர், பிட்ச்சாடனரின் சிற்பம் அழகின் உச்சம். கருவறை முகப்பில் பால கணபதியின்…

தில்லை தென் கோபுரத்தை எடுப்பித்த கோப்பெருஞ்சிங்கன்!

சேந்தமங்கலத்தைத் தலைநகராகக் கொண்ட மன்னனான மணவாளப் பெருமான், என்று அழைக்கப்படும் காடவராயன் கோப்பெருஞ்சிங்கன் தில்லை ஆடவல்லானிடம் பெரும் பற்றுடையவன். இவனுடைய 5ஆண்டில் தோன்றிய ஆற்றூர்ச் சாசனம் தில்லையம்பதியின் தெற்குக் கோபுரத்தைக் கட்டுவதற்கு இவன் செய்த தானத்தைக் குறிக்கிறது. இக்கோபுரம் இவனது பெயரால் “சொக்கச்சீயன் திருநிலை எழுகோபுரம்” என்று வழங்கப்பட்டது. இது ஏழு நிலைகளையுடைய கோபுரம் ஆகும். இத் திருப்பணிக்கு உடலாக ஆற்றூர் ஆன இராசராச நல்லூரில் நிலம் முன்னூற்றொன்றே முக்காலும், கொல்லைப் புன்செயும் சில்காசு ஆயங்களும் தேவதான…

தேவார பாடல் பெற்ற நடு நாட்டு தலமான சிவலோகநாதர் கோயில்!

இங்குள்ள இறைவன் சிவலோகநாதர், சுயம்பு மூர்த்தியாக மக்களுக்கு அருள்பாலிக்கிறார். இறைவனின் காவலர்களாகிய ‘திண்டி, முண்டி’ வழிபட்ட தலமாக இக்கோயில் பார்க்கப்படுகின்றது. முண்டி வழிபட்டதால் இத்தலம் ‘முண்டீச்சரம்’ என்று அழைக்கப்பெற்று அதுவே காலப்போக்கில் ‘திருமுண்டீச்சரம்’ என்று அழைக்கப்பெற்றுள்ளது. ‘முடீச்சரம்‘ என்பதே இத்தலத்தின் புராணபெயராக இருந்துள்ளது. சடையவர்மன் சுந்தரபாண்டியன் காலத்திய கல்வெட்டு ஒன்று “பொக்கணங் கொடுத்தருளிய நாயனார் கோயில் தானத்தார்க்கு அரசன் அனுப்பிய ஓலையிது. அதன்படி, இவ்வூரினைத் தேவதான இறையிலியாக்கி, வரிகளைக் கோயிலுக்குக் கொடுத்ததைக் குறிக்கிறது. விக்கிரமபாண்டியனான மூலத்தான வேளானின்…

தெரிந்த மாமல்லபுரம், தெரியாத இடங்கள் – வலையன்குட்டை ரதம்!

மாமல்லப்புரத்தின் எல்லைப் பகுதியில் வலையன்குட்டை அருகே அமைந்துள்ளது இந்த வலையன்குட்டை ரதம், இதனால் அதன் பெயரிடப்பட்டது என்று புலனாகிறது. பிடாரி ரதத்திற்கு தெற்கில் காணப்படும், இந்த ஒற்றைக் கல் ரதமானது வடிவத்தில் சிறியதாக இருந்தாலும் எழில் மிகுந்ததாக அமைக்கப்பட்டுள்ளது. சதுரமான நாகரி சிகரத்தை கொன்டு, இரண்டு அடுக்கு விமானமாக குடையப்பட்டுள்ளது. கிழக்கு நோக்கிய இந்த ஒற்றைக்கல் தலியானது, முகப்பில் முக மண்டபமும் அதனுடன் கருவறையும் அமைக்கப்பட்டுள்ளது. முக மண்டபத்தின் நுழைவாயில் இரண்டு தூண்கள் மற்றும் இரண்டு அரை…

இடு பிணம் தின்னும் இடாகினி பேய்!

ஓர் பாசண்டச் சாத்தற்குப் பாடுகிடந்தாளுக்கு,ஏசும் படி ஓர் இளங்கொடி ஆய், ‘ஆசு இலாய்!செய் தவம் இல்லோர்க்குத் தேவர் வரம் கொடார்;பொய் உரையே அன்று; பொருள் உரையே; கையில்படு பிணம் தா’ என்று, பறித்து, அவள் கைக் கொண்டு,சுடுகாட்டுக் கோட்டத்து, தூங்கு இருளில் சென்று, ஆங்குஇடு பிணம் தின்னும் இடாகினிப்பேய் வாங்கி,மடிஅகத்து இட்டாள், மகவை இ்டியுண்ட~ சிலப்பதிகாரம் முன்னொரு நாளிலே, ‘மாலதி‘ என்பவள், தன்னுடைய மாற்றாளின் மகவுக்குப் பாலூட்டினாள். பால் விக்கிப் பாலகன் மரித்தான். மாலதியும், “பார்ப்பானோடு அவன்…

Chithiram Pesuthada