எழில்மிகு தர்மதாரா லிங்கம்!

முப்பத்திரண்டு(32) பட்டைகளுடன் காட்சி தரும் பல்லவர் கால எழில்மிகு தர்மதாரா லிங்கம். 8 அல்லது 9ஆம் நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்தவை என்று நம்பப்படுகிறது. சிவலிங்கங்களில் பலவிதங்கள் உண்டு, அதில் பாணப்பகுதியில் பட்டைகள் அமைந்துள்ள சிவலிங்கங்களையும் சில திருத்தலங்களில் அமைக்கப்பட்டுள்ளன. அவ்வைகையான இலிங்கங்களை “தாராலிங்கம்’ என்று அழைக்கப்படுகின்றன. சிற்ப சாஸ்திரத்தின் விதிப்படி, தாராலிங்கங்கள் ஐந்து வகைப்படும் என்று கூறுகின்றது. அதாவது 4, 8, 16, 32, 64 என்ற விகிதத்தில் பட்டைகள் /தாரைகள் அமைக்கப்பட்டிருக்கும். நான்கு பட்டைகள் கொண்ட…

தெரிந்த மாமல்லபுரம், தெரியாத இடங்கள் | முகுந்த நாயனார் கோயில்

மாமல்லபுரத்தின் வடக்கே கங்கைகொண்டான் மண்டபத்திலிருந்து சென்னைக்கு செல்லும் நெடுஞ்சாலைக்கு சிறுதொலைவிற்கு முன்பே, வலதுபுறமாக மக்கள் நடமாட்டமின்றி கிழக்கு நோக்கிய ஒரு கோயிலை காணலாம். மாமல்லபுரத்தில் காணப்படும் கோயில்களில், இக்கோயில் சற்று வித்யாசமானதாய் காணப்படும். “முகுந்த நாயனார் கோயில்” என்று அழைக்கப்படும் இக்கோயில், கல்வெட்டின் மூலம் “திருமுகலிப்பாமுடையார்” கோயில் என்று அழைக்கப்பட்டதாக அறியமுடிகின்றது. இரண்டு அடுக்கு அமைப்போடு காணப்படும் இக்கோயில் தரைமட்டத்தை விட கீழே உள்ளது. கருவறை, முகமண்டபம் ஆகிய அமைப்போடு பாதபந்த அதிட்டான அமைப்பில் கட்டப்பட்டுள்ளது. நீள்சதுர…

சுயம்பு மூர்த்தியாக அருள்தரும் சாக்கோட்டை அமிர்தகலசநாதர்!

அமிர்தவல்லி சமேத ஸ்ரீ அமிர்தகலசநாத சுவாமி திருக்கோயில்திருக்கலயநல்லூர் – சாக்கோட்டை – கும்பகோணம், தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு சுயம்பு மூர்த்தியாக இத்தலத்தில் அமிர்தகலசநாதர் /அமிர்தகடேஸ்வரர் இறைவன் காட்சியளிக்கின்றார். திருக்கலயநல்லூர் அமிர்தகலசநாதர் கோயில் சுந்தரர் பாடல் பெற்ற திருத்தலம் ஆகும். தேவாரப்பாடல் பெற்ற தலங்களில் இது 131வது திருக்கோயிலாகவும், சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் 68ஆவது சிவத்தலமாகவும் விளங்குகின்றது. இத்தலத்தில் பச்சைக்கல்லால் ஆன லிங்கோற்பவர் சிற்பம் மிகவும் சிறப்புக்குரியது. லிங்கோற்பவர் பாதத்தில் திருமால் மகுடமணிந்த வராகமாகவும், மேலே…

காஞ்சிக்கோயில்களை நோக்கி ஒரு வரலாற்றுப் பயணம்!

சாஸ்த்ரா & சித்திரம் பேசுதடா குழுமம் இணைந்து நடத்திய காஞ்சிக்கோயில்களை நோக்கி ஒரு பயணம் இனிதே நடந்தேறியது! கோயில்களின் நகரமாம் காஞ்சியிலே, கோயில் வடிவமைப்பில் பல விந்தைகள் நிகழ்த்திய பல்லவர்களின் கைவண்ணத்தில் உருவான பழமையான கோயில்களை நோக்கி இந்த பயணம் 29 ஜனவரி 2023 ஞாயிறு அன்று நடைபெற்றது. இந்த பயணத்தில் மொத்தமாக 8 கோயில்கள் பார்க்கப்பட்டது. இளையவர்களுக்கு நாங்கள் சளைத்தவர்கள் இல்லை என்று கூறும் வகையில் காலை 5 மணிக்கு முன்பாகவே வந்தடைந்து எங்களை பிரமிப்பில்…

ஐப்பசி சதய நாயகன்!

சோழ தேசத்தை புகழின் உச்சிக்கும், வீரத்தின் உச்சிக்கும், கலையின் உச்சிக்கும் எடுத்து சென்ற ஒப்பற்ற தமிழ் வேந்தன், மக்களின் உள்ளங்களை ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் இன்று நம்மை கவர்ந்து ஆட்சி செய்கின்ற பொன்னியின் செல்வனான, சோழ தேசத்தின் செல்லப்பிள்ளை, இராஜராஜீச்சரம் என்ற மாபெரும் கோயிலை தந்த சிவபாதசேகரன், தனக்கு மரணமே இல்லை என்பதை உலகறியச் செய்த சோழ மாமன்னன் அருமொழி வர்மரான உடையார் ஸீ இராஜராஜ சோழ தேவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்! தஞ்சை மாநகருக்கு அடையாளமாகத்…

தெரிந்த மாமல்லபுரம், தெரியாத இடங்கள் | அதிரணசண்ட மண்டபம்

அதிரணசண்ட குடைவரைக் கோயில்! சென்னை மாமல்லபுரம் செல்லும் வழியில் அமைந்துள்ள சாளுவன்குப்பத்தில் புலிக்குகை வடபுறத்தே 200 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது அதிரணசண்ட பல்லவேஸ்வர மண்டபம் என்ற பல்லவ வரலாற்றுச் சின்னம். இது ஒரு சிவன் கோயிலாகும். நீள்சதுரப் பாறையில் கிழக்கு நோக்கி அமைந்த்துள்ளது இந்த அதிரணசண்ட குடைவரைக் கோயில். முகப்பில், சதுரம், கட்டு, சதுரம் என்று அமைப்பில் இரண்டு முழுத் தூண்களும், இரண்டு அறைதூண்களும், வளைந்த தரங்கபோதிகைகளும், உத்திரம், வாஜனம், வலபி, கபோதம், பூமிதேசம் போன்ற பிரஸ்தர…

கண் பார்வை அளித்த பெருங்குடி அகத்தீஸ்வரர்!

இன்றைக்கு நாம் பார்க்க போகின்ற இக்கோயில் சுந்தர சோழன் காலத்தில கட்டப்பட்ட சிவகாமி சுந்தரி உடனுறை அகத்தீஸ்வரர் கோயில், அதுவும் கண் பார்வைக்கான தளமாக இந்த கோயில் கருதப்படுகின்றது. என்ன தம்பி திடீர் என்று புராணம் பேசுற அப்படினு உங்களுக்கு தோன்றும், இதை நான் கூறவில்லை, இக்கோயிலின் கல்வெட்டுகள் கூறுகின்றது. இக்கோயிலானது திருச்சி வயலூர் செல்கின்ற சாலையில் சுமார் 8km தொலைவில், பெருங்குடி எனும் சிற்றூரில் அமைந்துள்ளது. தொல்லியல் துறையும் இந்த கோவில அழகா பராமரிப்பு செய்து…

எழில்மிகு தாராலிங்கம்!

16 பட்டை கொண்ட தாராலிங்கம், ஐராவதேசர் கோவில் / ஐராவதேசம், காஞ்சிபுரம் பதினாறு பட்டைகள் உடைய லிங்கம் சோடச தாராலிங்கம் எனப்படும். இந்த லிங்கத்தை சந்திரகலா லிங்கம் என்றும் கூறுவர். சிவலிங்கங்கள் பலவிதங்கள் உள்ளது போல், சிவலிங்கத்தின் உள்ள பாணப்பகுதியில் பட்டைகள் அமைந்துள்ள சிவலிங்கங்களையும் சில திருத்தலங்களில் தரிசிக்கலாம். அவை “தாராலிங்கம்’ என்று கூறப்படுகின்றன. சிற்பசாஸ்திரம் இவ்வகையான தாராலிங்கங்கள் ஐந்து வகைப்படும் என்று கூறுகிறது. அவை 4, 8, 16, 32, 64 என்ற விகிதத்தில் பட்டைகள்…

தமிழ்நாட்டின் பிரம்மாண்ட ராமர் கோவில்!

இன்றைக்கு நாம் பார்க்க போகும் இக்கோவில் தமிழ்நாட்டிலே பிரம்மாண்டமாக ராமருக்காக கட்டப்பட்ட யோக ராமர் கோவில். அதுபோக ராமர் இங்க வித்தியாசமா காட்சி தருகிறார், காணொளி முழுக்க எதையும் miss பண்ணாம பாருங்க அதுபோக நம்ம channel-அ இதுவரைக்கும் subscribe பண்ணாதவங்க subscribe பண்ணிக்கோங்க. இக்கோவிலுக்கு ராமச்சந்திர பெருமாள் கோவில் என்று இன்னொரு பெயரும் உள்ளது. இக்கோவிலானது திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி சேத்துப்பட்டு செல்லும் சாலையில் இந்த பிரம்மாண்ட யோக ராமர் கோவில் இருக்கு. விஜயநகர மன்னர்களும்…

புதுச்சேரியில் ராஜராஜ சோழன் கட்டிய சிவன் கோவில்

ரொம்ப நாள் கழிச்சு நம்ம இன்னைக்கு ஒரு அழகான கோவில பார்க்கப்போறோம். குண்டாங்குழி மகாதேவர் கோவில் இன்னைக்கு நாம பார்க்க போகிற இந்த கோவில் மாமன்னன் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட “திருகுண்டாங்குழி மகாதேவர் கோவில்“. இந்த கோவில் எங்க இருக்குன்னா விழுப்புரம் பாண்டிச்சேரி போகின்ற சாலையில் மதகடிப்பட்டு என்ற அமைதியான ஒரு ஊரில் தான் இருக்கு. இந்த கோவில ராஜராஜ சோழன் தான் கட்டினாரு சொல்லறத்துக்கு என்ன ஆதாரம், அதை நாம் இறுதியில் பார்க்கலாம். மேற்கு நோக்கி…

Chithiram Pesuthada