பல்லவ சிற்ப கலைக் களஞ்சியம்! கங்காதர மூர்த்தி!

கிபி 8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புகழ் பெற்ற பல்லவ மன்னர்களுள் ஒருவரான இராசசிம்மன் என்று அழைக்கப்பட்ட இரண்டாம் நரசிம்ம பல்லவன் மன்னவன் காலத்தில் கட்டப்பெற்ற ஒரு அழகான கற்றளி இந்த இறவாஸ்தானம். காஞ்சிபுரத்தில் உள்ள தொண்மையான கோவில்களில் இக்கோவிலும் ஒன்றாக கருதப்படுகிறது. ம்ருத்திஞ்ஜயேஸ்வர் என்றும் இக்கோவில் அழைக்கப்படுகிறது. சிவன் ஆலயங்களில் கோட்டத்தில் இடம்பெறும் மூர்த்தம் கங்காதாரர். கங்கை நதியை சிவன் தன் தலைமுடியில் ஏந்திய வடிவம். பகீரதனின் வேண்டுகோளை ஏற்று விண்ணுலகிலிருந்து பூமிக்கு வந்த, கங்கையின் வேகத்தை குறைக்க சிவபெருமான் கங்கையை தன் சடைமுடியில் தாங்கிய வடிவமே கங்காதரர் என்று கூறப்படுகிறது….

கதை சொல்லும் சிற்பங்கள்! கரி உரித்த சிவன்!

சிவபெருமானின் 64 வடிவங்களில் கஜாசுர சம்ஹாரர் என்ற வடிவமும் ஒன்று. கஜசம்ஹார மூர்த்தி என்றும் கரிஉரித்த சிவன் என்றும் கூறுவது உண்டு. பிரம்மனிடம் தவம்பூண்டு பெற்ற வரத்தினை வைத்து தேவர்களை வதைக்கிறான் #கஜாசுரன் என்ற அசுரன். முனிவர்களும், தேவர்களும் சிவனிடம் வேண்ட, யானை முகமுடைய ககஜாசுரனை வதம் செய்து தோலை உரித்துப் போர்த்துக்கொண்டு தாண்டவமாடி அகோரமாய் நின்றார் சிவபெருமான். இந்த வடிவத்திற்கு கஜயுத்த மூர்த்தி என்றும் பெயரும் உண்டு. கஜசம்ஹாரத்திற்கு இன்னுமொரு விதமாகவும் விளக்கம் உள்ளது, அதை…

எழில்மிகு தர்மதாரா லிங்கம்!

முப்பத்திரண்டு(32) பட்டைகளுடன் காட்சி தரும் பல்லவர் கால எழில்மிகு தர்மதாரா லிங்கம். 8 அல்லது 9ஆம் நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்தவை என்று நம்பப்படுகிறது. சிற்ப சாஸ்திரத்தின் விதிப்படி, தாராலிங்கங்கள் ஐந்து வகைப்படும் என்று கூறுகிறது. அதாவது 4, 8, 16, 32, 64 என்ற விகிதத்தில் பட்டைகள் /தாரைகள் அமைக்கப்பட்டிருக்கும். இடம்: ராமேஷ்வரர் லட்சுமனேஷ்வரர் ஆலயம், காஞ்சிபுரம் Beautiful Dharmadara Linga! Thirty-two (32) striped Pallava period Dharmadara Linga and the scholars believe…

உமை அம்மை இறைவனை வழிபட்ட தளம்!

கங்கணேசுவரர் கோவில், காஞ்சிபுரம் காஞ்சிபுரத்தில் எத்தனையோ கோவில்கள் இருந்தாலும், இன்னும் பல கோவில்கள் மக்களுக்கு தென்படாமல் இருப்பது ஆச்சர்யம் தான். அப்படிப்பட்ட ஒரு கோவில்தான் இந்த கங்கணேசம் என்று அழைக்கப்படுகின்ற கங்கணேசுவரர் கோவில். காஞ்சி புராணத்தில் இக்கோவிலை பற்றி கூறப்பட்டுள்ளது. இங்கே இறைவனை உமை அம்மை வழிபட்டதாக கூறப்படுகிறது. அதுபோக இங்கே நின்ற நிலையில் காணப்படும் விநாயகரின் சிலையை பார்க்க இரு கண்கள் போறாது. Although there are many temples in Kanchipuram, it is…

சிவராத்திரிக்கு மட்டுமே திறக்கப்படும் அதிசய கோவில்!

பிறவாதீஸ்வரர் கோவில் | பிறவாதீசுவரர் | பிறவாத்தானேசுவரர் | பிறவாத்தானம் மேற்கு நோக்கி அமைந்துள்ள பிறவாதீசுவரர் கோவிலானது, மக்களால் அதிகம் அறியப்படாத ஒரு கலை பொக்கிஷம். காஞ்சிப் புராணத்தில் தனிப்படலமாகச் இக்கோவிலைப்பற்றி கூறப்பட்டுள்ளது. இராசசிம்மன் என்று அழைக்கப்பெற்ற இரண்டாம் நரசிம்ம பல்லவன் மன்னரால் 8 ஆம் நூற்றாண்டில் கட்டப்பெற்றது. இக்கோவில் இராசசிம்மன்னனால் கைலாசநாதர் கோவிலுக்கு முன்பு காஞ்சிபுரத்தில் கட்டிய முதல் கோவில். Piravadeeswarar Temple | Piravasthanam | Priravadeeswarar Temple | பிறவாதீசுவரர் | பிறவாத்தானம்…

Chithiram Pesuthada