தெரிந்த மாமல்லபுரம், தெரியாத இடங்கள் – கொடிக்கால் மண்டபம்!

மும்மூர்த்தி குகையிலிருந்து மேற்கு நோக்கிச் சிறிது தூரம் சென்றால் ஒரே அறையுடன் கூடிய குகைக் கோயில் குடைவித்துள்ளதைக் காணலாம். கருவறை எந்த கடவுளரும் இல்லாமல் வெறுமையாய் காணப்பட்டாலும் இருபுறம் பெண் துவாரபாலர்கள் இருப்பதால் இது கொற்றவைக்காக அமைக்கப்பட்ட கோயில் என்று வல்லுநர்கள் கருதுகின்றனர். நீண்ட சதுரமான அமைப்புடைய இக்குடவரை கோயிலுள்ள பெண் துவாரபாலர்கள் இருவரும், மெலிந்து, வசீகரமான தோற்றத்துடன் காணப்படுகின்றனர். தென்புறமுள்ள பெண், வலது கையில் வில்லைப் பிடித்து நிற்கிறாள். வடபுறமுள்ள பெண், வலது கையில் கத்தியுடனும்…

கொல்லிமலை அறப்பள்ளி ஈசுவரர் கோயில்

வரலாற்றிலும், இலக்கியத்திலும் கொல்லிமலை பற்றிய செய்தி உண்டு. உதாரணமாக, அகநானூற்றுப் பாடல் ஒன்றில், “முள்ளூர் மன்னன் கழல்தொடிக் காரிசெல்லா நல்இசை நிறுத்த வல்வில்ஓரிக் கொன்று சேரலர்க்கு ஈந்தசெவ்வேர்ப் பலவின் பயம்கெழு கொல்லி”~ அகநானூறு, 209என்று வருவதைப் பார்க்கலாம். “வல்வில் ஓரி” என்னும் மன்னன் ஆண்ட பகுதியும், காலாங்கி முனிவர் முதலாக பதினெண் சித்தர்கள் தவம் செய்ததுமான இம்மலையில் நாசிக்கு மூலிகை மணமும், கண்ணுக்கு பசுமை விருந்தளிக்கும் அறப்பள்ளி எனும் இடத்தில் அமைந்துள்ளது இந்த அழகிய அறப்பள்ளி ஈசுவரர்…

தெரிந்த மாமல்லபுரம், தெரியாத இடங்கள் – சிறிய புலிக்குகை!

கடற்கரைக் கோயிலுக்குத் தெற்கில் சுமார் 100 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இந்த சிறிய படைப்பு. இங்குள்ள சிறிய புலிக்குகை அதன் முன்னோடியான சாளுவக் குப்பத்தின் புலிக்குகையை நினைவூட்டுகிறது. மூலத்தைப் போல சிறப்பு இல்லாததற்குக் காரணம், யாளிகள் முதலான சிற்பங்கள் இங்கு அதிகம் இல்லை. சற்றே பெரிய பாறை ஒன்றில் சிறிய கொற்றவை கோயில், ஒரு சிங்க உருவத்தின் மார்பில் செதுக்கப்பட்டுள்ளது. இதன் பின்பகுதியில் புலிக்குகையில் காண்பதுபோல தெய்வ உருவைத் தன்மீது கொண்டுள்ள ஒரு யானை வடிவம் உள்ளது….

பல்லவ பேரரசின் அறிய பொக்கிஷம் – வீரட்டேசுவரர் கோயில்

பல்லவ பேரரசின் கடைசி அரசரான “அபராஜிதவர்ம பல்லவன்” ஆட்சி காலத்தில் நம்பி அப்பி என்பவர் கருங்கற்களை கொண்டு செஞ்சடைஈசர்க்குக் தூங்கானைமாட வடிவிலான இக்கோயில் கட்டியுள்ளார் என்று இக்கோயில் கல்வெட்டின் மூலம் அறியப்படுகிறது. நற்கலைகள் எல்லாம் நவின்ற சீர் நம்பி அப்பி விருப்பத்துடன் இக்கோயிலை பொற்புறக் கட்டினார் என்பதைப் பல்லவ மன்னன் அபராஜிதன் ஒரு வெண்பா மூலம் பாடி அதனைக் கல்வெட்டாகவும் வெட்டி வைத்துள்ளான். “திருந்து திருத்தணியல் செஞ்சடை யீசர்க்குக்கருங்கல்லால் கற்றளியா நிற்க – விரும்பியேநற்கலைக ளெல்லா நவின்றசீர்…

9-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல்

9ஆம் நூற்றாண்டின் எழுத்தமைதியில் நான்கு வரிகள் கொண்ட கல்வெட்டும், அதன் கீழ் ஒரு வீரனின் உருவம் கொண்ட நடுகல். வீரன் தனது வலது கையை உயர்த்தி குத்துவாளை ஓங்கியவாறும், இடது கையானது முஷ்டி முத்திரையில் உள்ளது. தலைமுடி இரண்டு சுருள்கள் கொண்ட கொண்டையாக முடியப்பட்டும், அவரது இடுப்பில் மற்றொரு குறுவாளும் உள்ளது. நான்கு வரிகள் கொண்ட இக்கல்வெட்டு “கரைஞ்காட்டூர் மக்களுடன் நேர்ந்த பகைக்கு தள்ளம்பி என்பவரும், மற்றொரு வீரனும் தன்னுயிரை இழந்ததாக” குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் இக்கல்வெட்டில் முதல்…

கையில் வளரியுடன் வீரனின் நடுகல்

வளரி என்ற சொல்லுக்கு மிக பெரிய வரலாறு உண்டு. இன்று வளரி என்ற சொல்லும் அதன் பயன்பாடு பற்றி நமக்கு தெரியாமல் போனாலும், இது போன்ற நடுகற்கள் மூலமாக அல்லது சங்க இலக்கியங்கள் மூலமாகவோ எங்கோ ஒருவரால் இன்றும் பேசப்பட்டு வருகின்றது. “பொய்யாகியரோ! பொய்யாகியரோ!பா அடி யானை பரிசிலர்க்கு அருகாச்சீர் கெழு நோன் தாள் அகுதைகண் தோன்றியபொன் புனை திகிரியின் பொய்யாகியரோ!”~ புறநானூறு இதில் ‘திகிரி‘ என்பது வளரியின் இன்னொரு பெயராகவும். வளரி பெரும்பாலும் போர்களுக்கும், வேட்டையாடலுக்கும்…

அதிகம் அறியப்படாத சமண தலம்!

ஓணம்பாக்கம் எனும் இவ்வூரானது தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் தாலுகாவில் உள்ள ஒரு சிறிய கிராமம் ஆகும். இந்த ஓணம்பாக்கம் 1200 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியம் கொண்டது மற்றும் 8 ஆம் நூற்றாண்டில் ஒரு ஜெயின் மையமாக இருந்தது. குறத்திமலை, கூசாமலை, பட்டிமலை, மற்றும் வெண்மணிமலை என நான்கு குன்றுகளை மக்கள் குறிப்பிடுகின்றனர். ஆனால், திரும்பிய பக்கமெல்லாம் குவாரியின் தாக்கத்தால் அடையாளம் காண முடியவில்லை, மேலும், அடையாள பலகை இல்லாததால், சவாலாக உள்ளது. இந்த தளத்தை…

பாண்டியர்களின் கலைப்பொக்கிஷம் கழுகுமலை சமணர் கோயில்!

தென்னகத்தின் எல்லோரா என்று அழைக்கப்படும் கழுகுமலை வெட்டுவான் கோயில் தலை கீழாக கட்டப்பட்ட கோயிலுக்கு பெயர் போனது. கழுகுமலை வெட்டுவான் கோயிலுக்கு மிக அருகாமையில் உள்ளது பராந்தக நெடுஞ்சடையன் காலத்திய (768-800 CE) கழுகுமலை சமணர் கோயில். இவ்விடத்தில் திகம்பர சமணத் துறவிகள் தங்கி சமண சமயத்தைப் பரப்பிய இடமாக பார்க்கப்படுகின்றது. கழுகுமலை சமணர் குடைவரையில் ஒரே பாறையில் வரிசையாக சுமார் 100-க்கும் மேற்பட்ட தீர்த்தங்கர்கள் சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டிருக்கும் இடம் இது. மகாவீரர், பாகுபலி, பர்ஸ்வநாதர், மற்றும்…

தெரிந்த மாமல்லபுரம், தெரியாத இடங்கள் – வரலாற்றுப் பயணம்!

சாஸ்த்ரா & சித்திரம் பேசுதடா குழுமம் இணைந்து நடத்திய மாமல்லை கோயில்களை நோக்கி வரலாற்று பயணம் இனிதே நடந்தேறியது! கல்லும் கதை சொல்லும் என்பது போல மாமல்லை படைப்புகள் ஒவ்வொன்றும் தனித்துவமானது. கற்களையெல்லாம் கவின்மிகு கலைகளாக்கி தமிழர்களின் பெருமையையும் புகழையும் உலகுக்கு உணர்த்திச் சென்றவர்கள் பல்லவ மன்னர்கள். அப்படி, கலைக் கருவூலங்களாக விளங்கும் மாமல்லபுரத்தில், “தெரிந்த மாமல்லபுரம், தெரியாத இடங்கள்” என்ற தலைப்பில் மாமல்லை கோயில்களை நோக்கி இந்த பயணம் 19 மார்ச் 2023 ஞாயிறு அன்று…

எழில்மிகு தர்மதாரா லிங்கம்!

முப்பத்திரண்டு(32) பட்டைகளுடன் காட்சி தரும் பல்லவர் கால எழில்மிகு தர்மதாரா லிங்கம். 8 அல்லது 9ஆம் நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்தவை என்று நம்பப்படுகிறது. சிவலிங்கங்களில் பலவிதங்கள் உண்டு, அதில் பாணப்பகுதியில் பட்டைகள் அமைந்துள்ள சிவலிங்கங்களையும் சில திருத்தலங்களில் அமைக்கப்பட்டுள்ளன. அவ்வைகையான இலிங்கங்களை “தாராலிங்கம்’ என்று அழைக்கப்படுகின்றன. சிற்ப சாஸ்திரத்தின் விதிப்படி, தாராலிங்கங்கள் ஐந்து வகைப்படும் என்று கூறுகின்றது. அதாவது 4, 8, 16, 32, 64 என்ற விகிதத்தில் பட்டைகள் /தாரைகள் அமைக்கப்பட்டிருக்கும். நான்கு பட்டைகள் கொண்ட…

Chithiram Pesuthada