தெரிந்த மகாபலிபுரம், தெரியாத இடங்கள் | மகிஷாசுரன் குகை

மாமல்லபுரம் / மகாபலிபுரம் கடற்கரை கோவிலின் வடபுறத்தே கடல் அலைகள் சூழ ஒரு பெரிய பாறையின் மேல்புறத்தில் ஒரு குடவரை கோவில் ஒன்று குடையப்பட்டுள்ளது. குடைவரையின் மத்தியில் மகிஷாசுரமர்த்தினி என்று அழைக்கப்படுகின்ற கொற்றைவையின் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. கொற்றவைக்கு இருபுறமும் சிம்மமும், துவார பாலகிகள் காணப்படுகின்றனர். Mahabalipuram | Mamallapuram | Mahishasura Cave To the north of the Mamallapuram / Mahabalipuram Shore temple is a cave temple on a rock…

மலைக்குள் மறைந்திருக்கும் மகேசன்!

ஆற்காடு அருகே (சுமார் 17km) அமைந்துள்ள கரடி மலையில், கல் குவாரிகளில் இடையே மகேசன் கம்பீரமாக காட்சி அளிக்கிறார். சிவனின் பாதம் அருகே சேதம் அடைந்திருப்பதால், அப்படியே விட்டுவிட்டு சென்றுள்ளார்கள். சிலையின் வடிவத்தை வைத்து இது சமீபத்தில் செய்யப்பட்டது என்று நாம் தெரிந்து கொள்ள முடிகிறது. இப்படி கம்பீரமாக சிவனின் திருமேனி இதுவரை நான் கண்டதில்லை. YouTube: https://www.youtube.com/c/CookwithBabyma/videosInstagram: https://www.instagram.com/cookwithbabymaFacebook: https://www.facebook.com/chithirampesuthadasureshFlickr: https://www.flickr.com/photos/chithirampesuthada/ Thanks for supporting us!To contribute:PayPal us – paypal.me/sureshpriyanGoogle Pay us…

கிணற்றுக்குள் நடக்கும் அற்புத நிகழ்வு, நடவாவி உற்சவம்!

நடவாவி கிணறு | காஞ்சிபுரம் வரதராஜர் ரொம்ப நாட்களுக்கு அப்புறம் திரும்பவும் இந்த நடவாவி கிணறுக்கு வந்திருக்கேன். காரணம் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே நடத்தப்படும் நடவாவி உற்சவம். நடவாவி கிணற்றை பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள இந்த பதிவை, மறக்காம பாருங்க. https://chithirampesuthada.com/kanchipuram/ayyangarkulam-nadavai-kinaru/ | https://youtu.be/HSCbW0r-nZk நடவாவி உற்சவம் வருடா வருடம் சித்ரா பௌர்ணமி அன்று கொண்டாடப்படும் ஒரு அழகிய திருவிழா. யாகம் வளர்த்து நெருப்பாலும், நடவாவி கிணற்று நீராலும், பாலாற்றங்கரையில் காற்றாலும் வரதருக்கு அபிஷேகம் செய்யப்படுவதே…

சிவனின் ஐம்பெரும் சபைகளில் ஒன்றான திருநெல்வேலி தாமிர சபை!

நடராஜர் தன்னுடைய நடனத்தினால் சிறப்பித்த ஐந்து தலங்கள், “ஐம்பெரும் சபைகள்” என்றும், “பஞ்ச சபைகள்” என்றும் அழைக்கப்படுகின்றன. பொற்சபை, வெள்ளி சபை, இரத்தின சபை, தாமிர சபை, சித்திர சபை ஆகியவையே ஐந்து சபைகள் என்றழைக்கப்படுகின்றன. இதில் திருநெல்வேலியில் அமைந்துள்ள முக்கியமான திருத்தலங்களில் ஒன்று அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோவில். திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் இதில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் பாண்டிய நாட்டுத் தலங்களில் ஒன்றான திருநெல்வேலியில் அமைந்துள்ள முக்கியமான திருத்தலங்களில் ஒன்று அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோவில்….

மருத்துவமனையாக செயல்பட்ட திருமுக்கூடல் வெங்கடேசப் பெருமாள் கோவில்

1000 ஆண்டுகளுக்கு முன்பே ஒரு கோவில் மருத்துவமனையா செயல்பட்டதுனு சொன்ன நம்புவீங்களா. அப்படி ஒரு இடம்தான் இன்றைக்கு பார்க்கப்போகிறோம். காஞ்சிபுரம் செங்கல்பட்டு செல்லும் சாலையில், பாலாற்றின் தென்கரையில் அமைந்துள்ள திருமுக்கூடல் எனும் ஊரில் அமைந்துள்ளது அப்பன் ஸ்ரீ வெங்கடேஸ்வர பெருமாள் கோவில். வேகவதி ஆறு, செய்யாறு, பாலாறு ஆகிய மூன்று ஆறுகளும் இங்கே சங்கமிப்பதால் முக்கூடல் என்று பெயர் பெற்று பின்பு திருமுக்கூடல் என்று பெயர் வந்ததாக கூறப்படுகிறது.  கோவில் வெளிப்புறம் சாதாரணமாக தெரிந்தாலும், மொட்டை கோபுரம்…

வேண்டிக்கொண்டவர்களுக்கு அனைத்தையும் அருளும் கேசாவரம் கயிலாச ஈஸ்வரமுடையார்

கேசாவரம் கயிலாச ஈஸ்வரமுடைய மகாதேவர் ஆலயம். ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணத்திலிருந்து தக்கோலம் வழியாக சுமார் 17 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது கேசாவரம். அதாவது “கயிலாய ஈஸ்வரம்” என்பதே மாற்றம் பெற்று “கேசாவரம்‘ பெயர் மறுவியுள்ளது. மூன்று நதிகள் இங்கே சங்கமிப்பதால் புராணங்கள் இவ்விடத்தை “மோக்ஷ த்வீபம்” என்று அழைக்கின்றது. உத்திரவாகினியில் நீராடினால் மோட்சம் கிட்டும் என்பது ஐதீகம். அப்படியாக வடக்கு நோக்கி பாய்கின்ற கொசஸ்தலை ஆறும், நாம் பார்க்க போகும் இந்த கைலாச ஈசனின் திருப்பாதத்தில் உருவானதாகப்…

மகனுக்கு தாய் கட்டிய கந்தழீஸ்வரர் கோவில்!

சோழ சாம்ராஜ்யத்தின் ராஜமாதா என்று அழைக்கப்பெற்ற “செம்பியன் மாதேவியால்” தன் மகன் உத்தமசோழனின் நினைவாக கட்டப்பட்ட “உத்தமசோழீஸ்வரம்” என அழைக்கப்படும் “கந்தலீஸ்வரர் / கந்தழீஸ்வரர்” கோவிலானது, காஞ்சிபுரம் மாவட்டம் வாலஜாபாத் அருகேயுள்ள திரையனூர் என்று அழைக்கப்பெற்ற தென்னேரி என்னும் அழகிய கிராமத்தில் உள்ளது. விசாலமான இடத்தின் மையத்தில் தரைமட்டத்தை விட குறைந்தது 3அடி உயரத்தில் கிழக்கு நோக்கி அமைந்த இக்கற்றளி தற்பொழுது தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இக்கோவிலின் கட்டுமான அமைப்பு கருவறை, அர்த்தமண்டபம், அந்தராளம்,…

தன்னைத்தானே பலி கொடுக்கும் நவகண்டம் | அரிகண்டம் | தமிழரின் வீர மரபு | கொற்றவை வழிபாடு

முற்காலத்தில் தனது நாட்டிற்காகவும், தன நாட்டின் மன்னன் போரில் வெற்றிபெறவும் அல்லது அவர்கள் நலம் பெறவும், தாங்கள் எடுத்துக்கொண்ட திட்டங்கள் எவ்விதத் தடங்கலுமின்றி நடந்தேறவும் வீரர்கள் கொற்றவை தெய்வத்தின் முன், தங்களைத்தாங்னே பலியிட்டுக் கொள்ளும் வழக்கம் இருந்துள்ளதை நமக்கு கிடைக்கும் சிற்பங்கள், நடுகற்கள் கல்வெட்டுகள் போன்ற ஆவணங்கள் மூலம் அறிய முடிகின்றது. இதில் ‘நவகண்டம்’ என்பது கொற்றவை வழிபாட்டின் ஒரு முறையாகும். நவகண்டம்என்பதன் பொருள் நவம், அதாவது ஒன்பது, கண்டம் – துண்டங்கள். ஒரு வீரர் தன்…

கொற்றவை வழிபாடு | தூக்கு தலை நடுகற்கள் | தூங்கு தலை

சோழர் காலத்தின் (10 ஆம் நூற்றாண்டு) மாவீரர் கல் / நடுகல் (தூங்கு தலை அல்லது தூக்கு தலை) ராணிப்பேட்டை மாவட்டம் பாலூர் எனும் ஊரில் உள்ளது. முற்காலத்தில் கொற்றவை வழிபாட்டில் ஒன்றாக கருதப்பட்டது இந்த நடுகல் மரபு. இவ்வகையான நடுகல் மிகவும் அரிதானதாகும். இங்கே வீரன் ஒருவனின் தலையில் உள்ள குடுமியை ஒரு மூங்கிலில் கட்டப்பட்டு, பிறகு அவரது தலை துண்டிக்கப்படும். தலை துண்டிக்கப்படும்பொழுது மூங்கிலின் உந்து சக்தியால், குருதி தெறிக்க வீரனின் தலை பாகம்…

ஆனந்த வாழ்வு தரும் சோழர் கால ஆபத்சகாயேஸ்வரர் கோவில், தென்னேரி!

குலோத்துங்க சோழன் காலத்திய ஆனந்தவள்ளி சமேத ஆபத்சகாயேஸ்வரர் கோவிலானது, காஞ்சிபுரம் மாவட்டம் வாலஜாபாத் அருகேயுள்ள திரையனூர் என்று அழைக்கப்பெற்ற தென்னேரி என்னும் அழகிய கிராமத்தில் உள்ளது. இவ்வூரிலுள்ள ஏரி திரையனேரி என்றும் முற்காலத்தில் அழைக்கப்பெற்றது. ஏரியின் பெயரே மருவி இன்று தென்னேரி ஆனது. கோவிலுக்குள் நுழையும் முன்பு கொடிமரம் இல்லாமல் பலிபீடமும், நந்தி தேவர்க்கு தனி மண்டபமும் அமைந்துள்ளன. கோவில் கட்டிட கலையானது முப்பட்டை குமுதத்துடன் காணப்டும் அடித்தளம் பாதபந்த அதிட்டானம் என்ற அடிப்படையில் கட்டப்பெற்றுள்ளது. கிழக்கு…

Chithiram Pesuthada