யார் இந்த கொற்றவை? போர் தெய்வமாக அறியப்பட்டவளா?

Kotravai | Goddess Durga சிறுமணவூர், நிரஞ்சீஸ்வரர் ஆலயத்தில் அமைந்துள்ள தனிப்பலகை சிற்பமாக 6ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கொற்றவை காணப்படுகிறாள். சங்க இலக்கியங்களில் பாய் கலை பாவை என்று குறிப்பிடும் இவடிவத்தில் மான் வாகனத்துடன், அக்னி கிரீடம் பூண்டு, கரங்களில் கத்தி, வில், திரிசூலம், கேடயம், அம்பு, சங்கு, சக்கரம் போன்ற ஆயுதங்களை தாங்கி, கிளியுடன் காணப்படும் இவ்வன துர்க்கையின் பாதத்தின் அருகே நவகண்டம் கொடுக்க தயார் நிலையில் உள்ள வீரன் காணப்படுகிறான். Kotravai (Korrawai), also spelt Korravai…

செந்நிறத்தில் ஜொலிக்கும் ஒரு அழகான பொக்கிஷம்!

இன்று திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள திருச்சி கரூர் செல்லும் சாலையில் காவிரிக்கரையின் மேல் இயற்கையான சூழ்நிலையில் அமைந்துள்ள இந்தக் கற்கோவில் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டை சேர்ந்த சோழர் காலத்து திருச்செந்துறை “மானேந்தியவல்லி உடனுறை சந்திரசேகர சுவாமி திருக்கோவிலை”-த்தான் இன்று பார்க்கப் போகிறோம்! முதலாம் பராந்தகச் சோழனின் மருமகளும், அரிகுல கேசரியின் மனைவியான இருக்குவேளிர் குலத்தேவியான “பூதி ஆதித்த பிடாரி” என்னும் சோழப் பேரரசியால் இக்கற்றளி கட்டமைக்கப்பட்டது. கிழக்கு நோக்கி அமைந்த இக்கோவில், ஐந்தடுக்கு ராஜகோபுரத்தில் உள்ள சுதை…

சிவராத்திரிக்கு மட்டுமே திறக்கப்படும் அதிசய கோவில்!

பிறவாதீஸ்வரர் கோவில் | பிறவாதீசுவரர் | பிறவாத்தானேசுவரர் | பிறவாத்தானம் மேற்கு நோக்கி அமைந்துள்ள பிறவாதீசுவரர் கோவிலானது, மக்களால் அதிகம் அறியப்படாத ஒரு கலை பொக்கிஷம். காஞ்சிப் புராணத்தில் தனிப்படலமாகச் இக்கோவிலைப்பற்றி கூறப்பட்டுள்ளது. இராசசிம்மன் என்று அழைக்கப்பெற்ற இரண்டாம் நரசிம்ம பல்லவன் மன்னரால் 8 ஆம் நூற்றாண்டில் கட்டப்பெற்றது. இக்கோவில் இராசசிம்மன்னனால் கைலாசநாதர் கோவிலுக்கு முன்பு காஞ்சிபுரத்தில் கட்டிய முதல் கோவில். Piravadeeswarar Temple | Piravasthanam | Priravadeeswarar Temple | பிறவாதீசுவரர் | பிறவாத்தானம்…

Chithiram Pesuthada