9-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல்

9ஆம் நூற்றாண்டின் எழுத்தமைதியில் நான்கு வரிகள் கொண்ட கல்வெட்டும், அதன் கீழ் ஒரு வீரனின் உருவம் கொண்ட நடுகல். வீரன் தனது வலது கையை உயர்த்தி குத்துவாளை ஓங்கியவாறும், இடது கையானது முஷ்டி முத்திரையில் உள்ளது. தலைமுடி இரண்டு சுருள்கள் கொண்ட கொண்டையாக முடியப்பட்டும், அவரது இடுப்பில் மற்றொரு குறுவாளும் உள்ளது. நான்கு வரிகள் கொண்ட இக்கல்வெட்டு “கரைஞ்காட்டூர் மக்களுடன் நேர்ந்த பகைக்கு தள்ளம்பி என்பவரும், மற்றொரு வீரனும் தன்னுயிரை இழந்ததாக” குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் இக்கல்வெட்டில் முதல்…

கையில் வளரியுடன் வீரனின் நடுகல்

வளரி என்ற சொல்லுக்கு மிக பெரிய வரலாறு உண்டு. இன்று வளரி என்ற சொல்லும் அதன் பயன்பாடு பற்றி நமக்கு தெரியாமல் போனாலும், இது போன்ற நடுகற்கள் மூலமாக அல்லது சங்க இலக்கியங்கள் மூலமாகவோ எங்கோ ஒருவரால் இன்றும் பேசப்பட்டு வருகின்றது. “பொய்யாகியரோ! பொய்யாகியரோ!பா அடி யானை பரிசிலர்க்கு அருகாச்சீர் கெழு நோன் தாள் அகுதைகண் தோன்றியபொன் புனை திகிரியின் பொய்யாகியரோ!”~ புறநானூறு இதில் ‘திகிரி‘ என்பது வளரியின் இன்னொரு பெயராகவும். வளரி பெரும்பாலும் போர்களுக்கும், வேட்டையாடலுக்கும்…

தன்னைத்தானே பலி கொடுக்கும் நவகண்டம் | அரிகண்டம் | தமிழரின் வீர மரபு | கொற்றவை வழிபாடு

முற்காலத்தில் தனது நாட்டிற்காகவும், தன நாட்டின் மன்னன் போரில் வெற்றிபெறவும் அல்லது அவர்கள் நலம் பெறவும், தாங்கள் எடுத்துக்கொண்ட திட்டங்கள் எவ்விதத் தடங்கலுமின்றி நடந்தேறவும் வீரர்கள் கொற்றவை தெய்வத்தின் முன், தங்களைத்தாங்னே பலியிட்டுக் கொள்ளும் வழக்கம் இருந்துள்ளதை நமக்கு கிடைக்கும் சிற்பங்கள், நடுகற்கள் கல்வெட்டுகள் போன்ற ஆவணங்கள் மூலம் அறிய முடிகின்றது. இதில் ‘நவகண்டம்’ என்பது கொற்றவை வழிபாட்டின் ஒரு முறையாகும். நவகண்டம்என்பதன் பொருள் நவம், அதாவது ஒன்பது, கண்டம் – துண்டங்கள். ஒரு வீரர் தன்…

கொற்றவை வழிபாடு | தூக்கு தலை நடுகற்கள் | தூங்கு தலை

சோழர் காலத்தின் (10 ஆம் நூற்றாண்டு) மாவீரர் கல் / நடுகல் (தூங்கு தலை அல்லது தூக்கு தலை) ராணிப்பேட்டை மாவட்டம் பாலூர் எனும் ஊரில் உள்ளது. முற்காலத்தில் கொற்றவை வழிபாட்டில் ஒன்றாக கருதப்பட்டது இந்த நடுகல் மரபு. இவ்வகையான நடுகல் மிகவும் அரிதானதாகும். இங்கே வீரன் ஒருவனின் தலையில் உள்ள குடுமியை ஒரு மூங்கிலில் கட்டப்பட்டு, பிறகு அவரது தலை துண்டிக்கப்படும். தலை துண்டிக்கப்படும்பொழுது மூங்கிலின் உந்து சக்தியால், குருதி தெறிக்க வீரனின் தலை பாகம்…

Chithiram Pesuthada