இராஜேந்திர சோழன் நினைவிடமா?

பிரம்மதேசம் சந்திரமௌலீஸ்வரர் என்ற திருப்போந்தை ஆழ்வார் சிவன் கோயில், இராஜேந்திர சோழனின் பள்ளிப்படை என்றே செய்திகள் பரப்பப்பட்டு வருகிறது.  ஆனால் கல்வெட்டை நன்கு ஆய்ந்த ஆய்வாளர்கள் இக்கோயில் பள்ளிப்படை கோயில் அல்ல என்றும் இது வழக்கமாக அமைக்கப்பட்ட சிவன் கோயில் என்றும் தெரிவிக்கின்றனர்.  இதற்கு அவர்கள் ஆதாரமாக கொள்வது இக்கோயிலில் உள்ள கம்பவர்மன் கல்வெட்டு ஆகும். முன்பாகவே சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்னர் எழுப்பப்பட்ட கோயில் எப்படி பள்ளிப்படை கோயிலாக இருக்கும் என்பது அவர்களது வாதம்.  பிரம்மதேசம்…

தமிழகத்தின் முதல் ஆடலரசன் சிற்பம் பெற்ற சீயமங்கலம் குடைவரைக் கோயில்!

சீயமங்கலம், சிம்மமங்கலம் என்று பல்லவர் காலத்தில் அழைக்கப்பட்ட இவ்வூரில், குடைவரைக் கோயில் ஒன்றை அமைத்து அழகு பார்த்தான் மகேந்திரவர்மன். 7ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்குடைவரைக் கோயிலின் எதிராக வலது புறம் அமைந்துள்ள மிகப் பெரிய ஏரியும் அதன் நடுவில் ஆங்காங்கே செங்குத்தான தூண்களைப் போன்ற பாறைகளும் இயற்கை அழகுடன் அமைந்துள்ளன.  இயற்கையாக அமைந்துள்ள இத்தூண் அமைப்புகளால் இக்கோயிலில் குடிகொண்டுள்ள ஈசனுக்கு ‘தூணாண்டார்‘ என்றும் ‘ஸ்தம்பேஸ்வரர்‘ என்றும் அழைக்கப்பட்டுள்ளார். இங்குள்ள கல்வெட்டு இக்குடைவரைக் கோயிலை “அவனிபாஜன பல்லவேஸ்வரம்” எனக் கூறுகிறது….

மகேந்திரவர்ம பல்லவனின் உன்னத படைப்பு சத்ருமல்லேஸ்வரம்!

பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் எழுப்பிய கோயில்கள் இன்றும் தமிழகத்தின் கோயில் கட்டுமானக் கலைக்குத் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கின்றன. அதில் தனிச்சிறப்பு வாய்ந்தது தளவானூர் குடைவரைக் கோயில். முற்காலத்தில் தலைவாய்நல்லூர் என்று அழைக்கப்பெற்ற தளவானூருக்கு வடக்கே மாம்பட்டு என்னும் இடத்தில் பஞ்சபாண்டவர் மலையில் இக்குடைவரைக் கோயிலை காணலாம். கல்வெட்டின் மூலமாக இக்குடைவரைக் கோயில் ‘சத்ருமல்லேஸ்வரம்‘ என்று அழைக்கப்பெற்றதாக அறியமுடிகின்றது. தமிழ்நாட்டிலுள்ள குடைவரைக் கோயில்கலில், முகப்பில் மகரத் தோரண பெற்ற ஒரே குடைவரை என்பது சத்ருமல்லேஸ்வராலயத்தின் தனிச் சிறப்பாகும்….

நடுநாட்டில் சோழர் கால பொக்கிஷம்! – வேதபுரீசுவரர் கோயில், ஏமப்பூர்

ஏமப்பூர் என்று தற்பொழுது வழங்கும் இவ்வூர் திருக்கோயிலூர் வட்டத்தில் உள்ள திருவெண்ணெய்நல்லூருக்கு வடக்கே மலட்டாற்றின் வடகரையிலும், பெண்ணையாற்றின் தென்கரையிலும் அமைந்துள்ளது. ஏமப்பேரூர் ஒரு தனி நாடாக விளங்கி உள்ளது. இது ராஜேந்திர சிம்ம வளநாட்டு திருமுனைப்பாடியின் ஒருபகுதியாகும். கோயில் கோட்டத்தில் உள்ள சிற்பங்கள் ஒவ்வொன்றும் சோழர்கால கலைத்திறமைக்கு ஒரு எடுத்துக்காட்டு. பிட்ச்சாடனர், தட்சிணாமுர்த்தி, ரிஷபத்துடன் உமாசகித மூர்த்தி, பிரம்மா, துர்கை ஆகியோர் உள்ளனர். இதில் உமாசகிதர், பிட்ச்சாடனரின் சிற்பம் அழகின் உச்சம். கருவறை முகப்பில் பால கணபதியின்…

தில்லை தென் கோபுரத்தை எடுப்பித்த கோப்பெருஞ்சிங்கன்!

சேந்தமங்கலத்தைத் தலைநகராகக் கொண்ட மன்னனான மணவாளப் பெருமான், என்று அழைக்கப்படும் காடவராயன் கோப்பெருஞ்சிங்கன் தில்லை ஆடவல்லானிடம் பெரும் பற்றுடையவன். இவனுடைய 5ஆண்டில் தோன்றிய ஆற்றூர்ச் சாசனம் தில்லையம்பதியின் தெற்குக் கோபுரத்தைக் கட்டுவதற்கு இவன் செய்த தானத்தைக் குறிக்கிறது. இக்கோபுரம் இவனது பெயரால் “சொக்கச்சீயன் திருநிலை எழுகோபுரம்” என்று வழங்கப்பட்டது. இது ஏழு நிலைகளையுடைய கோபுரம் ஆகும். இத் திருப்பணிக்கு உடலாக ஆற்றூர் ஆன இராசராச நல்லூரில் நிலம் முன்னூற்றொன்றே முக்காலும், கொல்லைப் புன்செயும் சில்காசு ஆயங்களும் தேவதான…

தெரிந்த மாமல்லபுரம், தெரியாத இடங்கள் – வலையன்குட்டை ரதம்!

மாமல்லப்புரத்தின் எல்லைப் பகுதியில் வலையன்குட்டை அருகே அமைந்துள்ளது இந்த வலையன்குட்டை ரதம், இதனால் அதன் பெயரிடப்பட்டது என்று புலனாகிறது. பிடாரி ரதத்திற்கு தெற்கில் காணப்படும், இந்த ஒற்றைக் கல் ரதமானது வடிவத்தில் சிறியதாக இருந்தாலும் எழில் மிகுந்ததாக அமைக்கப்பட்டுள்ளது. சதுரமான நாகரி சிகரத்தை கொன்டு, இரண்டு அடுக்கு விமானமாக குடையப்பட்டுள்ளது. கிழக்கு நோக்கிய இந்த ஒற்றைக்கல் தலியானது, முகப்பில் முக மண்டபமும் அதனுடன் கருவறையும் அமைக்கப்பட்டுள்ளது. முக மண்டபத்தின் நுழைவாயில் இரண்டு தூண்கள் மற்றும் இரண்டு அரை…

தெரிந்த மாமல்லபுரம், தெரியாத இடங்கள் – பிடாரி ரதங்கள்!

இந்த ஒற்றைக் கல் ரதமானது பக்கிங்காம் கால்வாய்க்கு கிழக்குப் பக்கத்தில், பிடாரி அம்மன் கோயில் அருகே அமைந்துள்ளது, இதனால் அதன் பெயரிடப்பட்டது என்று புலனாகிறது. இங்கே இரண்டு ரதங்கள் அருகருகே கம்பீரமாக குடைவிக்கப்பட்டுள்ளது. எந்தவித சிற்பங்களின்றி குடையப்பட்டுள்ளதால் எந்த தெய்வத்திற்காக எழுப்பப்பட்டது என்று அறிய முடியவில்லை. இந்த இரண்டு ரதங்களும் விமானத்தின் மேல்பகுதி – பிரஸ்தரம் வரை செதுக்கப்பட்டுள்ளது. அதன் கீழ் பகுதியான சுவர் மட்டும் அதிட்டான பகுதி ஆரம்ப நிலையிலே உள்ளது. இரண்டு ரதங்களும் இரண்டு…

தெரிந்த மாமல்லபுரம், தெரியாத இடங்கள் – கொடிக்கால் மண்டபம்!

மும்மூர்த்தி குகையிலிருந்து மேற்கு நோக்கிச் சிறிது தூரம் சென்றால் ஒரே அறையுடன் கூடிய குகைக் கோயில் குடைவித்துள்ளதைக் காணலாம். கருவறை எந்த கடவுளரும் இல்லாமல் வெறுமையாய் காணப்பட்டாலும் இருபுறம் பெண் துவாரபாலர்கள் இருப்பதால் இது கொற்றவைக்காக அமைக்கப்பட்ட கோயில் என்று வல்லுநர்கள் கருதுகின்றனர். நீண்ட சதுரமான அமைப்புடைய இக்குடவரை கோயிலுள்ள பெண் துவாரபாலர்கள் இருவரும், மெலிந்து, வசீகரமான தோற்றத்துடன் காணப்படுகின்றனர். தென்புறமுள்ள பெண், வலது கையில் வில்லைப் பிடித்து நிற்கிறாள். வடபுறமுள்ள பெண், வலது கையில் கத்தியுடனும்…

தெரிந்த மாமல்லபுரம், தெரியாத இடங்கள் – சிறிய புலிக்குகை!

கடற்கரைக் கோயிலுக்குத் தெற்கில் சுமார் 100 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இந்த சிறிய படைப்பு. இங்குள்ள சிறிய புலிக்குகை அதன் முன்னோடியான சாளுவக் குப்பத்தின் புலிக்குகையை நினைவூட்டுகிறது. மூலத்தைப் போல சிறப்பு இல்லாததற்குக் காரணம், யாளிகள் முதலான சிற்பங்கள் இங்கு அதிகம் இல்லை. சற்றே பெரிய பாறை ஒன்றில் சிறிய கொற்றவை கோயில், ஒரு சிங்க உருவத்தின் மார்பில் செதுக்கப்பட்டுள்ளது. இதன் பின்பகுதியில் புலிக்குகையில் காண்பதுபோல தெய்வ உருவைத் தன்மீது கொண்டுள்ள ஒரு யானை வடிவம் உள்ளது….

பல்லவ பேரரசின் அறிய பொக்கிஷம் – வீரட்டேசுவரர் கோயில்

பல்லவ பேரரசின் கடைசி அரசரான “அபராஜிதவர்ம பல்லவன்” ஆட்சி காலத்தில் நம்பி அப்பி என்பவர் கருங்கற்களை கொண்டு செஞ்சடைஈசர்க்குக் தூங்கானைமாட வடிவிலான இக்கோயில் கட்டியுள்ளார் என்று இக்கோயில் கல்வெட்டின் மூலம் அறியப்படுகிறது. நற்கலைகள் எல்லாம் நவின்ற சீர் நம்பி அப்பி விருப்பத்துடன் இக்கோயிலை பொற்புறக் கட்டினார் என்பதைப் பல்லவ மன்னன் அபராஜிதன் ஒரு வெண்பா மூலம் பாடி அதனைக் கல்வெட்டாகவும் வெட்டி வைத்துள்ளான். “திருந்து திருத்தணியல் செஞ்சடை யீசர்க்குக்கருங்கல்லால் கற்றளியா நிற்க – விரும்பியேநற்கலைக ளெல்லா நவின்றசீர்…

Chithiram Pesuthada