அதிகம் அறியப்படாத சமண தலம்!

ஓணம்பாக்கம் எனும் இவ்வூரானது தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் தாலுகாவில் உள்ள ஒரு சிறிய கிராமம் ஆகும். இந்த ஓணம்பாக்கம் 1200 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியம் கொண்டது மற்றும் 8 ஆம் நூற்றாண்டில் ஒரு ஜெயின் மையமாக இருந்தது. குறத்திமலை, கூசாமலை, பட்டிமலை, மற்றும் வெண்மணிமலை என நான்கு குன்றுகளை மக்கள் குறிப்பிடுகின்றனர். ஆனால், திரும்பிய பக்கமெல்லாம் குவாரியின் தாக்கத்தால் அடையாளம் காண முடியவில்லை, மேலும், அடையாள பலகை இல்லாததால், சவாலாக உள்ளது. இந்த தளத்தை…

எழில்மிகு தர்மதாரா லிங்கம்!

முப்பத்திரண்டு(32) பட்டைகளுடன் காட்சி தரும் பல்லவர் கால எழில்மிகு தர்மதாரா லிங்கம். 8 அல்லது 9ஆம் நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்தவை என்று நம்பப்படுகிறது. சிவலிங்கங்களில் பலவிதங்கள் உண்டு, அதில் பாணப்பகுதியில் பட்டைகள் அமைந்துள்ள சிவலிங்கங்களையும் சில திருத்தலங்களில் அமைக்கப்பட்டுள்ளன. அவ்வைகையான இலிங்கங்களை “தாராலிங்கம்’ என்று அழைக்கப்படுகின்றன. சிற்ப சாஸ்திரத்தின் விதிப்படி, தாராலிங்கங்கள் ஐந்து வகைப்படும் என்று கூறுகின்றது. அதாவது 4, 8, 16, 32, 64 என்ற விகிதத்தில் பட்டைகள் /தாரைகள் அமைக்கப்பட்டிருக்கும். நான்கு பட்டைகள் கொண்ட…

தெரிந்த மாமல்லபுரம், தெரியாத இடங்கள் | முகுந்த நாயனார் கோயில்

மாமல்லபுரத்தின் வடக்கே கங்கைகொண்டான் மண்டபத்திலிருந்து சென்னைக்கு செல்லும் நெடுஞ்சாலைக்கு சிறுதொலைவிற்கு முன்பே, வலதுபுறமாக மக்கள் நடமாட்டமின்றி கிழக்கு நோக்கிய ஒரு கோயிலை காணலாம். மாமல்லபுரத்தில் காணப்படும் கோயில்களில், இக்கோயில் சற்று வித்யாசமானதாய் காணப்படும். “முகுந்த நாயனார் கோயில்” என்று அழைக்கப்படும் இக்கோயில், கல்வெட்டின் மூலம் “திருமுகலிப்பாமுடையார்” கோயில் என்று அழைக்கப்பட்டதாக அறியமுடிகின்றது. இரண்டு அடுக்கு அமைப்போடு காணப்படும் இக்கோயில் தரைமட்டத்தை விட கீழே உள்ளது. கருவறை, முகமண்டபம் ஆகிய அமைப்போடு பாதபந்த அதிட்டான அமைப்பில் கட்டப்பட்டுள்ளது. நீள்சதுர…

காஞ்சிக்கோயில்களை நோக்கி ஒரு வரலாற்றுப் பயணம்!

சாஸ்த்ரா & சித்திரம் பேசுதடா குழுமம் இணைந்து நடத்திய காஞ்சிக்கோயில்களை நோக்கி ஒரு பயணம் இனிதே நடந்தேறியது! கோயில்களின் நகரமாம் காஞ்சியிலே, கோயில் வடிவமைப்பில் பல விந்தைகள் நிகழ்த்திய பல்லவர்களின் கைவண்ணத்தில் உருவான பழமையான கோயில்களை நோக்கி இந்த பயணம் 29 ஜனவரி 2023 ஞாயிறு அன்று நடைபெற்றது. இந்த பயணத்தில் மொத்தமாக 8 கோயில்கள் பார்க்கப்பட்டது. இளையவர்களுக்கு நாங்கள் சளைத்தவர்கள் இல்லை என்று கூறும் வகையில் காலை 5 மணிக்கு முன்பாகவே வந்தடைந்து எங்களை பிரமிப்பில்…

தெரிந்த மாமல்லபுரம், தெரியாத இடங்கள் | அதிரணசண்ட மண்டபம்

அதிரணசண்ட குடைவரைக் கோயில்! சென்னை மாமல்லபுரம் செல்லும் வழியில் அமைந்துள்ள சாளுவன்குப்பத்தில் புலிக்குகை வடபுறத்தே 200 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது அதிரணசண்ட பல்லவேஸ்வர மண்டபம் என்ற பல்லவ வரலாற்றுச் சின்னம். இது ஒரு சிவன் கோயிலாகும். நீள்சதுரப் பாறையில் கிழக்கு நோக்கி அமைந்த்துள்ளது இந்த அதிரணசண்ட குடைவரைக் கோயில். முகப்பில், சதுரம், கட்டு, சதுரம் என்று அமைப்பில் இரண்டு முழுத் தூண்களும், இரண்டு அறைதூண்களும், வளைந்த தரங்கபோதிகைகளும், உத்திரம், வாஜனம், வலபி, கபோதம், பூமிதேசம் போன்ற பிரஸ்தர…

எழில்மிகு தாராலிங்கம்!

16 பட்டை கொண்ட தாராலிங்கம், ஐராவதேசர் கோவில் / ஐராவதேசம், காஞ்சிபுரம் பதினாறு பட்டைகள் உடைய லிங்கம் சோடச தாராலிங்கம் எனப்படும். இந்த லிங்கத்தை சந்திரகலா லிங்கம் என்றும் கூறுவர். சிவலிங்கங்கள் பலவிதங்கள் உள்ளது போல், சிவலிங்கத்தின் உள்ள பாணப்பகுதியில் பட்டைகள் அமைந்துள்ள சிவலிங்கங்களையும் சில திருத்தலங்களில் தரிசிக்கலாம். அவை “தாராலிங்கம்’ என்று கூறப்படுகின்றன. சிற்பசாஸ்திரம் இவ்வகையான தாராலிங்கங்கள் ஐந்து வகைப்படும் என்று கூறுகிறது. அவை 4, 8, 16, 32, 64 என்ற விகிதத்தில் பட்டைகள்…

தெரிந்த மகாபலிபுரம், தெரியாத இடங்கள் | மகிஷாசுரன் குகை

மாமல்லபுரம் / மகாபலிபுரம் கடற்கரை கோவிலின் வடபுறத்தே கடல் அலைகள் சூழ ஒரு பெரிய பாறையின் மேல்புறத்தில் ஒரு குடவரை கோவில் ஒன்று குடையப்பட்டுள்ளது. குடைவரையின் மத்தியில் மகிஷாசுரமர்த்தினி என்று அழைக்கப்படுகின்ற கொற்றைவையின் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. கொற்றவைக்கு இருபுறமும் சிம்மமும், துவார பாலகிகள் காணப்படுகின்றனர். Mahabalipuram | Mamallapuram | Mahishasura Cave To the north of the Mamallapuram / Mahabalipuram Shore temple is a cave temple on a rock…

மருத்துவமனையாக செயல்பட்ட திருமுக்கூடல் வெங்கடேசப் பெருமாள் கோவில்

1000 ஆண்டுகளுக்கு முன்பே ஒரு கோவில் மருத்துவமனையா செயல்பட்டதுனு சொன்ன நம்புவீங்களா. அப்படி ஒரு இடம்தான் இன்றைக்கு பார்க்கப்போகிறோம். காஞ்சிபுரம் செங்கல்பட்டு செல்லும் சாலையில், பாலாற்றின் தென்கரையில் அமைந்துள்ள திருமுக்கூடல் எனும் ஊரில் அமைந்துள்ளது அப்பன் ஸ்ரீ வெங்கடேஸ்வர பெருமாள் கோவில். வேகவதி ஆறு, செய்யாறு, பாலாறு ஆகிய மூன்று ஆறுகளும் இங்கே சங்கமிப்பதால் முக்கூடல் என்று பெயர் பெற்று பின்பு திருமுக்கூடல் என்று பெயர் வந்ததாக கூறப்படுகிறது.  கோவில் வெளிப்புறம் சாதாரணமாக தெரிந்தாலும், மொட்டை கோபுரம்…

ஆனந்த வாழ்வு தரும் சோழர் கால ஆபத்சகாயேஸ்வரர் கோவில், தென்னேரி!

குலோத்துங்க சோழன் காலத்திய ஆனந்தவள்ளி சமேத ஆபத்சகாயேஸ்வரர் கோவிலானது, காஞ்சிபுரம் மாவட்டம் வாலஜாபாத் அருகேயுள்ள திரையனூர் என்று அழைக்கப்பெற்ற தென்னேரி என்னும் அழகிய கிராமத்தில் உள்ளது. இவ்வூரிலுள்ள ஏரி திரையனேரி என்றும் முற்காலத்தில் அழைக்கப்பெற்றது. ஏரியின் பெயரே மருவி இன்று தென்னேரி ஆனது. கோவிலுக்குள் நுழையும் முன்பு கொடிமரம் இல்லாமல் பலிபீடமும், நந்தி தேவர்க்கு தனி மண்டபமும் அமைந்துள்ளன. கோவில் கட்டிட கலையானது முப்பட்டை குமுதத்துடன் காணப்டும் அடித்தளம் பாதபந்த அதிட்டானம் என்ற அடிப்படையில் கட்டப்பெற்றுள்ளது. கிழக்கு…

பூமிக்கடியில் நீரில் மூழ்கி இருக்கும் அதிசய கோவில்!

காஞ்சிபுரம் என்று சொன்னாலே பல கோவில்களை கொண்டது என்பதை நாம் மறுக்கமுடியாத உண்மை. ஆனால் காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இன்னும் அறியப்படாத அழகிய மற்றும் புராதமான இடங்கள், கோவில்கள் உள்ளன. அதில் ஒன்று தான் இந்த நடவாவி கிணறு. நடவாவி கிணறு | நடப்பா கிணறு | Nadavavi Kinaru நடவாவி கிணறு அல்லது நடவாய் கிணறு என்பது காஞ்சிபுரத்தில் இருந்து சுமார் 7 கிமீ தொலைவில் உள்ள அய்யங்கார்குளம் கிராமத்தில் அமைந்துள்ள…

Chithiram Pesuthada