தில்லை தென் கோபுரத்தை எடுப்பித்த கோப்பெருஞ்சிங்கன்!

சேந்தமங்கலத்தைத் தலைநகராகக் கொண்ட மன்னனான மணவாளப் பெருமான், என்று அழைக்கப்படும் காடவராயன் கோப்பெருஞ்சிங்கன் தில்லை ஆடவல்லானிடம் பெரும் பற்றுடையவன். இவனுடைய 5ஆண்டில் தோன்றிய ஆற்றூர்ச் சாசனம் தில்லையம்பதியின் தெற்குக் கோபுரத்தைக் கட்டுவதற்கு இவன் செய்த தானத்தைக் குறிக்கிறது. இக்கோபுரம் இவனது பெயரால் “சொக்கச்சீயன் திருநிலை எழுகோபுரம்” என்று வழங்கப்பட்டது. இது ஏழு நிலைகளையுடைய கோபுரம் ஆகும். இத் திருப்பணிக்கு உடலாக ஆற்றூர் ஆன இராசராச நல்லூரில் நிலம் முன்னூற்றொன்றே முக்காலும், கொல்லைப் புன்செயும் சில்காசு ஆயங்களும் தேவதான…

பாண்டியர்களின் கலைப்பொக்கிஷம் கழுகுமலை சமணர் கோயில்!

தென்னகத்தின் எல்லோரா என்று அழைக்கப்படும் கழுகுமலை வெட்டுவான் கோயில் தலை கீழாக கட்டப்பட்ட கோயிலுக்கு பெயர் போனது. கழுகுமலை வெட்டுவான் கோயிலுக்கு மிக அருகாமையில் உள்ளது பராந்தக நெடுஞ்சடையன் காலத்திய (768-800 CE) கழுகுமலை சமணர் கோயில். இவ்விடத்தில் திகம்பர சமணத் துறவிகள் தங்கி சமண சமயத்தைப் பரப்பிய இடமாக பார்க்கப்படுகின்றது. கழுகுமலை சமணர் குடைவரையில் ஒரே பாறையில் வரிசையாக சுமார் 100-க்கும் மேற்பட்ட தீர்த்தங்கர்கள் சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டிருக்கும் இடம் இது. மகாவீரர், பாகுபலி, பர்ஸ்வநாதர், மற்றும்…

சிவனின் ஐம்பெரும் சபைகளில் ஒன்றான திருநெல்வேலி தாமிர சபை!

நடராஜர் தன்னுடைய நடனத்தினால் சிறப்பித்த ஐந்து தலங்கள், “ஐம்பெரும் சபைகள்” என்றும், “பஞ்ச சபைகள்” என்றும் அழைக்கப்படுகின்றன. பொற்சபை, வெள்ளி சபை, இரத்தின சபை, தாமிர சபை, சித்திர சபை ஆகியவையே ஐந்து சபைகள் என்றழைக்கப்படுகின்றன. இதில் திருநெல்வேலியில் அமைந்துள்ள முக்கியமான திருத்தலங்களில் ஒன்று அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோவில். திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் இதில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் பாண்டிய நாட்டுத் தலங்களில் ஒன்றான திருநெல்வேலியில் அமைந்துள்ள முக்கியமான திருத்தலங்களில் ஒன்று அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோவில்….

Chithiram Pesuthada