தெரிந்த மாமல்லபுரம், தெரியாத இடங்கள் | அதிரணசண்ட மண்டபம்

அதிரணசண்ட குடைவரைக் கோயில்! சென்னை மாமல்லபுரம் செல்லும் வழியில் அமைந்துள்ள சாளுவன்குப்பத்தில் புலிக்குகை வடபுறத்தே 200 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது அதிரணசண்ட பல்லவேஸ்வர மண்டபம் என்ற பல்லவ வரலாற்றுச் சின்னம். இது ஒரு சிவன் கோயிலாகும். நீள்சதுரப் பாறையில் கிழக்கு நோக்கி அமைந்த்துள்ளது இந்த அதிரணசண்ட குடைவரைக் கோயில். முகப்பில், சதுரம், கட்டு, சதுரம் என்று அமைப்பில் இரண்டு முழுத் தூண்களும், இரண்டு அறைதூண்களும், வளைந்த தரங்கபோதிகைகளும், உத்திரம், வாஜனம், வலபி, கபோதம், பூமிதேசம் போன்ற பிரஸ்தர…

எழில்மிகு தாராலிங்கம்!

16 பட்டை கொண்ட தாராலிங்கம், ஐராவதேசர் கோவில் / ஐராவதேசம், காஞ்சிபுரம் பதினாறு பட்டைகள் உடைய லிங்கம் சோடச தாராலிங்கம் எனப்படும். இந்த லிங்கத்தை சந்திரகலா லிங்கம் என்றும் கூறுவர். சிவலிங்கங்கள் பலவிதங்கள் உள்ளது போல், சிவலிங்கத்தின் உள்ள பாணப்பகுதியில் பட்டைகள் அமைந்துள்ள சிவலிங்கங்களையும் சில திருத்தலங்களில் தரிசிக்கலாம். அவை “தாராலிங்கம்’ என்று கூறப்படுகின்றன. சிற்பசாஸ்திரம் இவ்வகையான தாராலிங்கங்கள் ஐந்து வகைப்படும் என்று கூறுகிறது. அவை 4, 8, 16, 32, 64 என்ற விகிதத்தில் பட்டைகள்…

தமிழ்நாட்டின் பிரம்மாண்ட ராமர் கோவில்!

இன்றைக்கு நாம் பார்க்க போகும் இக்கோவில் தமிழ்நாட்டிலே பிரம்மாண்டமாக ராமருக்காக கட்டப்பட்ட யோக ராமர் கோவில். அதுபோக ராமர் இங்க வித்தியாசமா காட்சி தருகிறார், காணொளி முழுக்க எதையும் miss பண்ணாம பாருங்க அதுபோக நம்ம channel-அ இதுவரைக்கும் subscribe பண்ணாதவங்க subscribe பண்ணிக்கோங்க. இக்கோவிலுக்கு ராமச்சந்திர பெருமாள் கோவில் என்று இன்னொரு பெயரும் உள்ளது. இக்கோவிலானது திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி சேத்துப்பட்டு செல்லும் சாலையில் இந்த பிரம்மாண்ட யோக ராமர் கோவில் இருக்கு. விஜயநகர மன்னர்களும்…

புதுச்சேரியில் ராஜராஜ சோழன் கட்டிய சிவன் கோவில்

ரொம்ப நாள் கழிச்சு நம்ம இன்னைக்கு ஒரு அழகான கோவில பார்க்கப்போறோம். குண்டாங்குழி மகாதேவர் கோவில் இன்னைக்கு நாம பார்க்க போகிற இந்த கோவில் மாமன்னன் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட “திருகுண்டாங்குழி மகாதேவர் கோவில்“. இந்த கோவில் எங்க இருக்குன்னா விழுப்புரம் பாண்டிச்சேரி போகின்ற சாலையில் மதகடிப்பட்டு என்ற அமைதியான ஒரு ஊரில் தான் இருக்கு. இந்த கோவில ராஜராஜ சோழன் தான் கட்டினாரு சொல்லறத்துக்கு என்ன ஆதாரம், அதை நாம் இறுதியில் பார்க்கலாம். மேற்கு நோக்கி…

சோழர் கால கலை பெட்டகம்! குரங்கநாதர் கோவில்!

கிபி 9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த, சோழர் கால கட்டடக் கலையின் மிகச் சிறந்த முன்மாதிரியாக விளங்கும் ஒரு கலை பெட்டகம் இன்று காணப்போகிறோம். குரங்குநாதர் கோவில், சீனிவாசநல்லூர் திருச்சி- நாமக்கல் நெடுஞ்சாலையில், முசிறி தாண்டியதும் வருவது காவேரிகரிக்கரை கிராமம் சீனிவாசநல்லூர். இங்கே இடைக்கால சோழ மன்னர்களால் கட்டப்பட்ட குரங்கநாதர் கோவில் என்று இன்று அழைக்கப்படுகின்ற திருக்குரக்குத்துறை மகாதேவர் கோவில் அமைந்துள்ளது. கோவிலின் உள்ள சிற்பங்கள் ஒவொன்றும் சோழ சிற்பக்கலையின் உச்சி என்றே கூறலாம். அந்த அளவிற்கு…

தெரிந்த மகாபலிபுரம், தெரியாத இடங்கள் | மகிஷாசுரன் குகை

மாமல்லபுரம் / மகாபலிபுரம் கடற்கரை கோவிலின் வடபுறத்தே கடல் அலைகள் சூழ ஒரு பெரிய பாறையின் மேல்புறத்தில் ஒரு குடவரை கோவில் ஒன்று குடையப்பட்டுள்ளது. குடைவரையின் மத்தியில் மகிஷாசுரமர்த்தினி என்று அழைக்கப்படுகின்ற கொற்றைவையின் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. கொற்றவைக்கு இருபுறமும் சிம்மமும், துவார பாலகிகள் காணப்படுகின்றனர். Mahabalipuram | Mamallapuram | Mahishasura Cave To the north of the Mamallapuram / Mahabalipuram Shore temple is a cave temple on a rock…

கிணற்றுக்குள் நடக்கும் அற்புத நிகழ்வு, நடவாவி உற்சவம்!

நடவாவி கிணறு | காஞ்சிபுரம் வரதராஜர் ரொம்ப நாட்களுக்கு அப்புறம் திரும்பவும் இந்த நடவாவி கிணறுக்கு வந்திருக்கேன். காரணம் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே நடத்தப்படும் நடவாவி உற்சவம். நடவாவி கிணற்றை பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள இந்த பதிவை, மறக்காம பாருங்க. https://chithirampesuthada.com/kanchipuram/ayyangarkulam-nadavai-kinaru/ | https://youtu.be/HSCbW0r-nZk நடவாவி உற்சவம் வருடா வருடம் சித்ரா பௌர்ணமி அன்று கொண்டாடப்படும் ஒரு அழகிய திருவிழா. யாகம் வளர்த்து நெருப்பாலும், நடவாவி கிணற்று நீராலும், பாலாற்றங்கரையில் காற்றாலும் வரதருக்கு அபிஷேகம் செய்யப்படுவதே…

சிவனின் ஐம்பெரும் சபைகளில் ஒன்றான திருநெல்வேலி தாமிர சபை!

நடராஜர் தன்னுடைய நடனத்தினால் சிறப்பித்த ஐந்து தலங்கள், “ஐம்பெரும் சபைகள்” என்றும், “பஞ்ச சபைகள்” என்றும் அழைக்கப்படுகின்றன. பொற்சபை, வெள்ளி சபை, இரத்தின சபை, தாமிர சபை, சித்திர சபை ஆகியவையே ஐந்து சபைகள் என்றழைக்கப்படுகின்றன. இதில் திருநெல்வேலியில் அமைந்துள்ள முக்கியமான திருத்தலங்களில் ஒன்று அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோவில். திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் இதில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் பாண்டிய நாட்டுத் தலங்களில் ஒன்றான திருநெல்வேலியில் அமைந்துள்ள முக்கியமான திருத்தலங்களில் ஒன்று அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோவில்….

கதை சொல்லும் சிற்பங்கள்! கரி உரித்த சிவன்!

சிவபெருமானின் 64 வடிவங்களில் கஜாசுர சம்ஹாரர் என்ற வடிவமும் ஒன்று. கஜசம்ஹார மூர்த்தி என்றும் கரிஉரித்த சிவன் என்றும் கூறுவது உண்டு. பிரம்மனிடம் தவம்பூண்டு பெற்ற வரத்தினை வைத்து தேவர்களை வதைக்கிறான் #கஜாசுரன் என்ற அசுரன். முனிவர்களும், தேவர்களும் சிவனிடம் வேண்ட, யானை முகமுடைய ககஜாசுரனை வதம் செய்து தோலை உரித்துப் போர்த்துக்கொண்டு தாண்டவமாடி அகோரமாய் நின்றார் சிவபெருமான். இந்த வடிவத்திற்கு கஜயுத்த மூர்த்தி என்றும் பெயரும் உண்டு. கஜசம்ஹாரத்திற்கு இன்னுமொரு விதமாகவும் விளக்கம் உள்ளது, அதை…

ஐயாறப்பர் கோவிலில் காணப்படும் சிவபார்வதியின் கலைநயம் மிக்க புடைப்பு சிறப்பம்!

தேவாரத் திருத்தலங்களின் ஒன்றான திருவையாறு, ஐயாறப்பர் கோவிலில் காணப்படும் சிவபார்வதியின் கலைநயம் மிக்க புடைப்பு சிறப்பம். காவிரிக்கரையில் காசிக்கு சமமாகக் கருதப்படும் 6 சிவஸ்தலங்களில் திருவையாறும் ஒன்றாகும். “புலன் ஐந்தும் பொறி கலங்கி நெறி மயங்கிஅறிவு அழிந்திட்டு ஐம்மேல் உந்திஅலமந்த போதாக அஞ்சேல் என்றுஅருள் செய்வான் அமருங்கோயில்வலம் வந்த மடவார்கள் நடமாடமுழவு அதிர மழையென்று அஞ்சிச்சில மந்தி அலமந்து மரமேறிமுகில் பார்க்கும் திருவையாறே.” – என்று திருஞானசம்பந்தர் திருவையாரை பதிகத்தில் பாடுகிறார். நல்லாறும், பழையாறும், கோட்டாற் றொடுநலந்திகழும்…

Chithiram Pesuthada