சக்தி வடிவங்களில் ஒன்றான துர்க்கை!

நாராயணி என்றும் அழைக்கப்படும் விஷ்ணு துர்க்கை, தேவியின் பல வடிவங்களில் ஒன்றாகும். துர்க்கையின் பல அவதாரங்களில், கருணையும் உக்கிரமும் கொண்டதாகத் திகழ்வது துர்க்கை ரூபம் என்கிறது புராணம். நான்கு கரங்களை உடையவள் – சங்கு மற்றும் சக்கரம் (பிரயோக சக்கரம்) ஆகியவற்றை தன் மேல் கையில் ஏந்தியவள். இடது கை அவள் தொடையிலும், வலது அபய முத்திரையுடன் காண்பவள். இடம்: இராஜராஜேஸ்வரமுடைய மகாதேவர் கோவில், சிவபுரம் Vishnu Durga Vishnu Durga, also known as Narayani,…

பூமிக்கடியில் நீரில் மூழ்கி இருக்கும் அதிசய கோவில்!

காஞ்சிபுரம் என்று சொன்னாலே பல கோவில்களை கொண்டது என்பதை நாம் மறுக்கமுடியாத உண்மை. ஆனால் காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இன்னும் அறியப்படாத அழகிய மற்றும் புராதமான இடங்கள், கோவில்கள் உள்ளன. அதில் ஒன்று தான் இந்த நடவாவி கிணறு. நடவாவி கிணறு | நடப்பா கிணறு | Nadavavi Kinaru நடவாவி கிணறு அல்லது நடவாய் கிணறு என்பது காஞ்சிபுரத்தில் இருந்து சுமார் 7 கிமீ தொலைவில் உள்ள அய்யங்கார்குளம் கிராமத்தில் அமைந்துள்ள…

பல்லவ சிற்ப கலைக் களஞ்சியம்! கங்காதர மூர்த்தி!

கிபி 8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புகழ் பெற்ற பல்லவ மன்னர்களுள் ஒருவரான இராசசிம்மன் என்று அழைக்கப்பட்ட இரண்டாம் நரசிம்ம பல்லவன் மன்னவன் காலத்தில் கட்டப்பெற்ற ஒரு அழகான கற்றளி இந்த இறவாஸ்தானம். காஞ்சிபுரத்தில் உள்ள தொண்மையான கோவில்களில் இக்கோவிலும் ஒன்றாக கருதப்படுகிறது. ம்ருத்திஞ்ஜயேஸ்வர் என்றும் இக்கோவில் அழைக்கப்படுகிறது. சிவன் ஆலயங்களில் கோட்டத்தில் இடம்பெறும் மூர்த்தம் கங்காதாரர். கங்கை நதியை சிவன் தன் தலைமுடியில் ஏந்திய வடிவம். பகீரதனின் வேண்டுகோளை ஏற்று விண்ணுலகிலிருந்து பூமிக்கு வந்த, கங்கையின் வேகத்தை குறைக்க சிவபெருமான் கங்கையை தன் சடைமுடியில் தாங்கிய வடிவமே கங்காதரர் என்று கூறப்படுகிறது….

சூரியன் வழிபட்ட பதங்கிஸ்வரர் ஆலயம்!

அருள்மிகு பிரமராம்பிகை உடனுறை பதங்கீஸ்வரர் ஆலயம் பாலாற்றங்கரையில் வடக்கு புறத்தில், கிழக்கு நோக்கி அமைந்த பிரமராம்பிகை உடனுறை பதங்கீஸ்வரர் ஆலயம் பல்லவர் ஆட்சி காலத்தில் கட்டப்பெற்றது. பின்பு வந்த சோழ மன்னர்களால் புனரமைக்கப்பட்டது. முகமண்டபம் விஜயநகர மன்னர்களால் விரிவாக்கம் செய்யப்பட்டது. இரண்டடுக்கு விமானத்துடன், பாதபந்த அதிட்டானத்துடன் கட்டப்பெற்றுள்ளது. ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து உற்றுர் கோட்டத்து பெரும்பலையூர் நாட்டு பெரும்பலையூர் என்றும் ராஜேந்திர சோழ நல்லூர் என்றும் அழைக்கப்பெற்றதாக கல்வெட்டுகள் கூறுகின்றது. முதலாம் பராந்தக சோழன், முதலாம் குலோத்துங்க…

வரங்களை அள்ளித்தரும் கரி வரதர்!

கரி வரதர் பெருமாள் கோவிலானது, கருவை, அர்த்தமண்டபம் மற்றும் முகமண்டபத்துடன் காணப்படுகிறது. முகப்பில் கருடனும், கருவறையில் தன் தொடையில் தாயாரை அமர்த்தியவாறு கரி வரதர் பெருமாள் காட்சியளிக்கிறார். கருவறையின் சுவர் பகுதியில் மேற்கு நோக்கி அமைந்த கோட்டத்தில், ஆதிசேஷன் மேல் அமர்ந்தவாறு பச்சைக்கல்லால் ஆன பெருமாள் “பரமபத நாதன்” திருக்கோலத்தில் காட்சி தருகிறார். இடம்: கரி வரதர் பெருமாள் கோவில், பனம்பாக்கம், கடம்பத்தூர் கரிய மாணிக்க பெருமாள் கோவில், செஞ்சி, பனம்பாக்கம் The Karivarada Perumal Temple…

ஆலமர்செல்வன்! தெக்கணமூர்த்தி! தட்சிணாமூர்த்தி!

அமைதியாக புன்னகை தவழும் முகத்தோடு அருள்பாலிக்கும் தட்சிணாமூர்த்தி தனது இடது காலை மடித்து, வலக்காலை முயலகன் முதுகின்மீது தொங்கவிட்டு, பத்ம பீடத்தில் அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார். பெரும்பாலும் ஆலயங்களில் முயலகன் மீது கால் வைத்து சின்முத்திரை காட்டி சனகாதி முனிவர்களுக்கு சாத்திரங்களை உபதேசம் செய்கின்ற வியாக்கியான தட்சிணாமூர்த்தியையே தரிசிக்கிறோம். இடம்: ஜனமேஜய ஈஸ்வரர் கோவில் All Siva temples have the image of Dakshinamurthy in the South-facing Koshta. And also, the…

கோவில்களில் துவாரபாலர்கள்!

கோவில் வாசலில் துவாரபாலர் இருவர் இருப்பதை நாம் காணமுடியும். “துவாரா” என்ற சொல் “வாயில்” என்றும், பால என்பது “காப்போன்” என்றும் பொருள்படும். கோவில்களில், துவாரபாலர் படிமங்கள் தல புராணத்தின் பின்னணியில் வைக்கப்பட்டதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். பொதுவாக துவாரபாலர்கள் கோவில் வாயில்களின் இருபுறங்களிலும் காணப்படும் வாயிற்காப்போர் உருவங்கள். சிவன் கோவில்களில் திரிசூலநாதர் – மழுவுடையார், சண்டி – முண்டி, உய்யக்கொண்டார் – ஆட்கொண்டார், சண்டன் – பிரசண்டன், பிரம்மா – திருமால் ஆகிய துவாரபாலர்கள் காணமுடியும். வைணவ…

கதை சொல்லும் சிற்பங்கள்! கரி உரித்த சிவன்!

சிவபெருமானின் 64 வடிவங்களில் கஜாசுர சம்ஹாரர் என்ற வடிவமும் ஒன்று. கஜசம்ஹார மூர்த்தி என்றும் கரிஉரித்த சிவன் என்றும் கூறுவது உண்டு. பிரம்மனிடம் தவம்பூண்டு பெற்ற வரத்தினை வைத்து தேவர்களை வதைக்கிறான் #கஜாசுரன் என்ற அசுரன். முனிவர்களும், தேவர்களும் சிவனிடம் வேண்ட, யானை முகமுடைய ககஜாசுரனை வதம் செய்து தோலை உரித்துப் போர்த்துக்கொண்டு தாண்டவமாடி அகோரமாய் நின்றார் சிவபெருமான். இந்த வடிவத்திற்கு கஜயுத்த மூர்த்தி என்றும் பெயரும் உண்டு. கஜசம்ஹாரத்திற்கு இன்னுமொரு விதமாகவும் விளக்கம் உள்ளது, அதை…

ஐயாறப்பர் கோவிலில் காணப்படும் சிவபார்வதியின் கலைநயம் மிக்க புடைப்பு சிறப்பம்!

தேவாரத் திருத்தலங்களின் ஒன்றான திருவையாறு, ஐயாறப்பர் கோவிலில் காணப்படும் சிவபார்வதியின் கலைநயம் மிக்க புடைப்பு சிறப்பம். காவிரிக்கரையில் காசிக்கு சமமாகக் கருதப்படும் 6 சிவஸ்தலங்களில் திருவையாறும் ஒன்றாகும். “புலன் ஐந்தும் பொறி கலங்கி நெறி மயங்கிஅறிவு அழிந்திட்டு ஐம்மேல் உந்திஅலமந்த போதாக அஞ்சேல் என்றுஅருள் செய்வான் அமருங்கோயில்வலம் வந்த மடவார்கள் நடமாடமுழவு அதிர மழையென்று அஞ்சிச்சில மந்தி அலமந்து மரமேறிமுகில் பார்க்கும் திருவையாறே.” – என்று திருஞானசம்பந்தர் திருவையாரை பதிகத்தில் பாடுகிறார். நல்லாறும், பழையாறும், கோட்டாற் றொடுநலந்திகழும்…

முழுமுதற் கடவுள் விநாயகர்!

“ஐந்து கரத்தனை யானை முகத்தனைஇந்தி னிளம்பிறை போலும் எயிற்றனைநந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.” – பத்தாம் திருமுறை சிவபுரம் ஸ்ரீ இராஜராஜ ஈஸ்வரமுடையார் கோவில் அர்த்த மண்டபத்தின் தெற்கு தேவகோட்டத்தில், விநாயகர் பத்ம பீடத்தில் லலிதாசனத்தில் அமர்ந்த கோலத்தில் காணப்படுகிறார். விநாயகரின் மேல் வலது கரத்தில் அங்குசம், கீழ் வலது கரத்தில் தந்தம், மேல் இடது கரத்தில் பாசம், கீழ் இடது கரத்தில் மோதகம் ஆகியவற்றுடன் காணப்படுகிறார். தலையில் கரண்ட மகுடமும், அதற்குமேல்…

Chithiram Pesuthada