Hidden Histories: The Untold Story of Tirumalpur’s Konar Temple!

Tucked away in the peaceful village of Tirumalpur in Ranipet District lies the little-known Konar Temple—a quiet but significant piece of Tamil Nadu’s heritage. Though not widely recognized today, the temple holds layers of history, tradition, and architectural interest. How to Reach the Temple The Temple is situated on the Tirumalpur to Panappakkam route, which…

இராஜேந்திர சோழன் நினைவிடமா?

பிரம்மதேசம் சந்திரமௌலீஸ்வரர் என்ற திருப்போந்தை ஆழ்வார் சிவன் கோயில், இராஜேந்திர சோழனின் பள்ளிப்படை என்றே செய்திகள் பரப்பப்பட்டு வருகிறது.  ஆனால் கல்வெட்டை நன்கு ஆய்ந்த ஆய்வாளர்கள் இக்கோயில் பள்ளிப்படை கோயில் அல்ல என்றும் இது வழக்கமாக அமைக்கப்பட்ட சிவன் கோயில் என்றும் தெரிவிக்கின்றனர்.  இதற்கு அவர்கள் ஆதாரமாக கொள்வது இக்கோயிலில் உள்ள கம்பவர்மன் கல்வெட்டு ஆகும். முன்பாகவே சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்னர் எழுப்பப்பட்ட கோயில் எப்படி பள்ளிப்படை கோயிலாக இருக்கும் என்பது அவர்களது வாதம்.  பிரம்மதேசம்…

நடுநாட்டில் சோழர் கால பொக்கிஷம்! – வேதபுரீசுவரர் கோயில், ஏமப்பூர்

ஏமப்பூர் என்று தற்பொழுது வழங்கும் இவ்வூர் திருக்கோயிலூர் வட்டத்தில் உள்ள திருவெண்ணெய்நல்லூருக்கு வடக்கே மலட்டாற்றின் வடகரையிலும், பெண்ணையாற்றின் தென்கரையிலும் அமைந்துள்ளது. ஏமப்பேரூர் ஒரு தனி நாடாக விளங்கி உள்ளது. இது ராஜேந்திர சிம்ம வளநாட்டு திருமுனைப்பாடியின் ஒருபகுதியாகும். கோயில் கோட்டத்தில் உள்ள சிற்பங்கள் ஒவ்வொன்றும் சோழர்கால கலைத்திறமைக்கு ஒரு எடுத்துக்காட்டு. பிட்ச்சாடனர், தட்சிணாமுர்த்தி, ரிஷபத்துடன் உமாசகித மூர்த்தி, பிரம்மா, துர்கை ஆகியோர் உள்ளனர். இதில் உமாசகிதர், பிட்ச்சாடனரின் சிற்பம் அழகின் உச்சம். கருவறை முகப்பில் பால கணபதியின்…

தில்லை தென் கோபுரத்தை எடுப்பித்த கோப்பெருஞ்சிங்கன்!

சேந்தமங்கலத்தைத் தலைநகராகக் கொண்ட மன்னனான மணவாளப் பெருமான், என்று அழைக்கப்படும் காடவராயன் கோப்பெருஞ்சிங்கன் தில்லை ஆடவல்லானிடம் பெரும் பற்றுடையவன். இவனுடைய 5ஆண்டில் தோன்றிய ஆற்றூர்ச் சாசனம் தில்லையம்பதியின் தெற்குக் கோபுரத்தைக் கட்டுவதற்கு இவன் செய்த தானத்தைக் குறிக்கிறது. இக்கோபுரம் இவனது பெயரால் “சொக்கச்சீயன் திருநிலை எழுகோபுரம்” என்று வழங்கப்பட்டது. இது ஏழு நிலைகளையுடைய கோபுரம் ஆகும். இத் திருப்பணிக்கு உடலாக ஆற்றூர் ஆன இராசராச நல்லூரில் நிலம் முன்னூற்றொன்றே முக்காலும், கொல்லைப் புன்செயும் சில்காசு ஆயங்களும் தேவதான…

தேவார பாடல் பெற்ற நடு நாட்டு தலமான சிவலோகநாதர் கோயில்!

இங்குள்ள இறைவன் சிவலோகநாதர், சுயம்பு மூர்த்தியாக மக்களுக்கு அருள்பாலிக்கிறார். இறைவனின் காவலர்களாகிய ‘திண்டி, முண்டி’ வழிபட்ட தலமாக இக்கோயில் பார்க்கப்படுகின்றது. முண்டி வழிபட்டதால் இத்தலம் ‘முண்டீச்சரம்’ என்று அழைக்கப்பெற்று அதுவே காலப்போக்கில் ‘திருமுண்டீச்சரம்’ என்று அழைக்கப்பெற்றுள்ளது. ‘முடீச்சரம்‘ என்பதே இத்தலத்தின் புராணபெயராக இருந்துள்ளது. சடையவர்மன் சுந்தரபாண்டியன் காலத்திய கல்வெட்டு ஒன்று “பொக்கணங் கொடுத்தருளிய நாயனார் கோயில் தானத்தார்க்கு அரசன் அனுப்பிய ஓலையிது. அதன்படி, இவ்வூரினைத் தேவதான இறையிலியாக்கி, வரிகளைக் கோயிலுக்குக் கொடுத்ததைக் குறிக்கிறது. விக்கிரமபாண்டியனான மூலத்தான வேளானின்…

கொல்லிமலை அறப்பள்ளி ஈசுவரர் கோயில்

வரலாற்றிலும், இலக்கியத்திலும் கொல்லிமலை பற்றிய செய்தி உண்டு. உதாரணமாக, அகநானூற்றுப் பாடல் ஒன்றில், “முள்ளூர் மன்னன் கழல்தொடிக் காரிசெல்லா நல்இசை நிறுத்த வல்வில்ஓரிக் கொன்று சேரலர்க்கு ஈந்தசெவ்வேர்ப் பலவின் பயம்கெழு கொல்லி”~ அகநானூறு, 209என்று வருவதைப் பார்க்கலாம். “வல்வில் ஓரி” என்னும் மன்னன் ஆண்ட பகுதியும், காலாங்கி முனிவர் முதலாக பதினெண் சித்தர்கள் தவம் செய்ததுமான இம்மலையில் நாசிக்கு மூலிகை மணமும், கண்ணுக்கு பசுமை விருந்தளிக்கும் அறப்பள்ளி எனும் இடத்தில் அமைந்துள்ளது இந்த அழகிய அறப்பள்ளி ஈசுவரர்…

பல்லவ பேரரசின் அறிய பொக்கிஷம் – வீரட்டேசுவரர் கோயில்

பல்லவ பேரரசின் கடைசி அரசரான “அபராஜிதவர்ம பல்லவன்” ஆட்சி காலத்தில் நம்பி அப்பி என்பவர் கருங்கற்களை கொண்டு செஞ்சடைஈசர்க்குக் தூங்கானைமாட வடிவிலான இக்கோயில் கட்டியுள்ளார் என்று இக்கோயில் கல்வெட்டின் மூலம் அறியப்படுகிறது. நற்கலைகள் எல்லாம் நவின்ற சீர் நம்பி அப்பி விருப்பத்துடன் இக்கோயிலை பொற்புறக் கட்டினார் என்பதைப் பல்லவ மன்னன் அபராஜிதன் ஒரு வெண்பா மூலம் பாடி அதனைக் கல்வெட்டாகவும் வெட்டி வைத்துள்ளான். “திருந்து திருத்தணியல் செஞ்சடை யீசர்க்குக்கருங்கல்லால் கற்றளியா நிற்க – விரும்பியேநற்கலைக ளெல்லா நவின்றசீர்…

கையில் வளரியுடன் வீரனின் நடுகல்

வளரி என்ற சொல்லுக்கு மிக பெரிய வரலாறு உண்டு. இன்று வளரி என்ற சொல்லும் அதன் பயன்பாடு பற்றி நமக்கு தெரியாமல் போனாலும், இது போன்ற நடுகற்கள் மூலமாக அல்லது சங்க இலக்கியங்கள் மூலமாகவோ எங்கோ ஒருவரால் இன்றும் பேசப்பட்டு வருகின்றது. “பொய்யாகியரோ! பொய்யாகியரோ!பா அடி யானை பரிசிலர்க்கு அருகாச்சீர் கெழு நோன் தாள் அகுதைகண் தோன்றியபொன் புனை திகிரியின் பொய்யாகியரோ!”~ புறநானூறு இதில் ‘திகிரி‘ என்பது வளரியின் இன்னொரு பெயராகவும். வளரி பெரும்பாலும் போர்களுக்கும், வேட்டையாடலுக்கும்…

சுயம்பு மூர்த்தியாக அருள்தரும் சாக்கோட்டை அமிர்தகலசநாதர்!

அமிர்தவல்லி சமேத ஸ்ரீ அமிர்தகலசநாத சுவாமி திருக்கோயில்திருக்கலயநல்லூர் – சாக்கோட்டை – கும்பகோணம், தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு சுயம்பு மூர்த்தியாக இத்தலத்தில் அமிர்தகலசநாதர் /அமிர்தகடேஸ்வரர் இறைவன் காட்சியளிக்கின்றார். திருக்கலயநல்லூர் அமிர்தகலசநாதர் கோயில் சுந்தரர் பாடல் பெற்ற திருத்தலம் ஆகும். தேவாரப்பாடல் பெற்ற தலங்களில் இது 131வது திருக்கோயிலாகவும், சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் 68ஆவது சிவத்தலமாகவும் விளங்குகின்றது. இத்தலத்தில் பச்சைக்கல்லால் ஆன லிங்கோற்பவர் சிற்பம் மிகவும் சிறப்புக்குரியது. லிங்கோற்பவர் பாதத்தில் திருமால் மகுடமணிந்த வராகமாகவும், மேலே…

காஞ்சிக்கோயில்களை நோக்கி ஒரு வரலாற்றுப் பயணம்!

சாஸ்த்ரா & சித்திரம் பேசுதடா குழுமம் இணைந்து நடத்திய காஞ்சிக்கோயில்களை நோக்கி ஒரு பயணம் இனிதே நடந்தேறியது! கோயில்களின் நகரமாம் காஞ்சியிலே, கோயில் வடிவமைப்பில் பல விந்தைகள் நிகழ்த்திய பல்லவர்களின் கைவண்ணத்தில் உருவான பழமையான கோயில்களை நோக்கி இந்த பயணம் 29 ஜனவரி 2023 ஞாயிறு அன்று நடைபெற்றது. இந்த பயணத்தில் மொத்தமாக 8 கோயில்கள் பார்க்கப்பட்டது. இளையவர்களுக்கு நாங்கள் சளைத்தவர்கள் இல்லை என்று கூறும் வகையில் காலை 5 மணிக்கு முன்பாகவே வந்தடைந்து எங்களை பிரமிப்பில்…

Chithiram Pesuthada